பான் இந்தியா ஹீரோயின் ஆக மாறும் ருக்மணி வசந்த் | விஜய் மீண்டும் நடிக்க வருவார் : அனலி ஹீரோயின் ஆருடம் | டொவினோ தாமஸின் படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிக்கும் பிரித்விராஜ் | 'சேவ் பாக்ஸ்' மோசடி வழக்கு ; அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜரான நடிகர் ஜெயசூர்யா | பிளாஷ்பேக்: படப்பிடிப்பு முடியும் முன்பே பலியான “பத்ரகாளி” பட நாயகி ராணி சந்திரா | சிறுத்தையின் கர்ஜனையால் தெறித்து ஓடிய நடிகை மவுனி ராய் | அண்ணனின் திருமண நாளிலேயே தனது திருமணத்திற்கு தேதி குறித்த அல்லு சிரிஷ் | 'திரிஷ்யம்-3'யில் அக்ஷய் கண்ணாவுக்கு பதிலாக நடிக்கும் விஸ்வரூபம் நடிகர் | புறநானூறு படத்திலிருந்து சூர்யா விலகியது ஏன்? : சுதா கொங்கரா பதில் | அரசியலுக்கு வந்தால் சாதிக்கு எதிரான கட்சி தொடங்குவேன் : மாரி செல்வராஜ் |

தமிழகத்தில் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிக்கான உள்ளாட்சி தேர்தல் பிப்., 19ல் நடந்தது. இந்த தேர்தலில் திமுக, அதிமுக, பா.ஜ., நாம் தமிழர் கட்சி, மக்கள் நீதி மையம் உள்ளிட்ட பல கட்சிகளுடன் நடிகர் விஜய்யின் மக்கள் இயக்கத்தை சேர்ந்தவர்களும் சுயேச்சையாக களமிறங்கினர். தேர்தலில் பதிவான ஓட்டுகள் இன்று(பிப்., 22)எண்ணப்பட்டு முடிவுகள் வெளியாகி வருகின்றன.
இதில் புதுக்கோட்டை மாவட்டத்தில் 4வது வார்டில் போட்டியிட்ட பர்வேஸ், வாலாஜாபேட்டையில் 3வது வார்டில் போட்டியிட்ட மோகன்ராஜ், குமாரபாளையத்தில் போட்டியிட்ட வேல்முருகன், தேனி மாவட்டம் அனுமந்தன்பட்டி 14வது வார்டில் போட்டியிட்ட வேல்மயில், பொன்னேரி 16வது வார்டில் போட்டியிட்ட மணிமாலா, விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு, கொடிக்குளம் 5வது வார்டில் போட்டியிட்ட ராஜசேகரன் ஆகிய விஜய்யின் மக்கள் இயக்கத்தினர் வெற்றி பெற்றுள்ளனர். இன்னும் ஓரிரு வார்டுகளில் விஜய்யின் மக்கள் இயக்கத்தில் வெற்றி பெற்றுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.