ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது |
சினிமாவில் ஒன்றாக ஜோடி சேர்ந்து நடிக்கும் நடிகர், நடிகைகளைப் பற்றிய காதல் கிசுகிசுக்கள் காலம் காலமாக வந்து கொண்டிருக்கிறது. அந்த கிசுகிசக்களே அவர்களைக் காதலர்களாக்கி, கல்யாணமும் செய்து கொள்ள வைத்துவிடும். அவர்களில் ஒரு சிலர் பின்னர் பிரிந்து போன வரலாறும் உண்டு.
தெலுங்குத் திரையுலகத்தில் தற்போதைய காதல் கிசுகிசு ஜோடியாக இருப்பவர்கள் 'அர்ஜுன் ரெட்டி' புகழ் விஜய் தேவரகொண்டா, 'புஷ்பா' புகழ் ராஷ்மிகா மந்தனா. தமிழில் விஜய் தேவரகொண்டா 'நோட்டா' படத்திலும், ராஷ்மிகா மந்தனா 'சுல்தான்' படத்திலும் நடித்தவர்கள்.
இவர்கள் இருவரும் இணைந்து தெலுங்கில் நடித்த 'கீதா கோவிந்தம், டியர் காம்ரேட்' படங்களில் மிகப் பொருத்தமான ஜோடியாக ரசிகர்களுக்குத் தெரிந்தார்கள். இருவரது குடும்பமும் நெருக்கமானவர்கள் என்றும் டோலிவுட் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ராஷ்மிகாவுக்கு ஏற்கெனவே கன்னட நடிகர் ரக்ஷித் உடன் நிச்சயதார்த்தம் மட்டும் நடந்தது. ஆனால், ஒரு வருடத்திற்குப் பிறகு இருவரும் திருமணம் செய்து கொள்ளாமலேயே பிரிந்துவிட்டனர். அதன்பிறகு சமீப காலமாக விஜய், ராஷ்மிகா இருவரும் காதலித்து வருவதாக செய்திகள் வந்தவண்ணம் உள்ளன.
நேற்று முதல் பல பாலிவுட் மீடியாக்களில் இவர்களது காதலைப் பற்றிய செய்திதான் அதிகம் இடம் பெற்றுள்ளது. இருவரும் இந்த வருடம் திருமணம் செய்து கொள்ளப்போவதாக செய்திகளை எழுதியிருக்கிறார்கள்.
விஜய் தற்போது பான்--இந்தியா படமான 'லிகர்' படத்திலும், ராஷ்மிகா ஹிந்தியில் நேரடியாக 'மிஷன் மஞ்சு, குட்பை' ஆகிய படங்களிலும் நடித்து வருகிறார்கள். இருவரது காதல் செய்தியில் எந்த அளவுக்கு உண்மை என்பது விரைவில் தெரிய வரும்.