ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
திரையுலக பிரபலங்கள் பெரும்பாலானோர் தற்போது இன்ஸ்டாகிராம் போன்ற சோசியல் மீடியாவில் ஆக்டிவாக இருக்கின்றனர். பலரும் தங்களது தகவல்களை ரசிகர்களுக்கு இவற்றின் மூலம்தான் தெரியப்படுத்துகின்றனர். அதேசமயம் சில விஷமிகள் இது போன்ற நட்சத்திரங்களின் கணக்குகளை ஹேக் செய்து அதில் விஷமத்தனமான செய்திகளை பரப்பி அவர்களை சங்கடத்திலும் சிலநேரம் சிக்கலிலும் சிக்க வைக்கின்றனர்.
அந்த வகையில் சமீபத்தில் நடிகர் துல்கர் சல்மான், தனது இன்ஸ்டாகிராம் கணக்கு ஹேக் செய்யப்பட்டதாகவும் ஒரு வழியாக தான் அதை மீட்டு விட்டதாகவும் அதில் இருந்து ஏதாவது மெசேஜ் வந்திருந்தால் அதை கண்டுகொள்ளாமல் தவிர்க்குமாறும் தகவல் வெளியிட்டிருந்தார்.
இந்த பரபரப்பு அடங்குவதற்குள் தனது இன்ஸ்டாகிராம் கணக்கும் ஹேக் செய்யப்பட்டுள்ளதாக கூறியுள்ளார் நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் பட நடிகை காயத்ரி. இதுகுறித்து காயத்ரி கூறுகையில், துல்கர்சல்மான் போலவே ஏதாவது மெசேஜ் வந்திருந்தால் அதை கண்டுகொள்ளாமல் தவிர்க்குமாறு வேண்டுகோள் விடுத்திருந்தார். அந்த பதிவுக்கு பதிலளித்துள்ள நடிகர் பிரேம்ஜி அவரிடமிருந்து தனக்கு ஒரு குறுஞ்செய்தி வந்ததாகவும் அதை கிளிக் செய்தபோது வேறு ஏதோ ஒரு வலைதள பக்கத்திற்கு அழைத்துச் சென்றதாகவும் கூறியுள்ளார்.