வரதட்சணை வாங்கி திருமணம் செய்து கொண்டேனா? ரம்யா பாண்டியன் கொடுத்த விளக்கம் | சிவப்பு நிறத்தில் புதிய கார் வாங்கிய ஏ. ஆர். ரஹ்மான்! | ‛போய் வா நண்பா': ‛குபேரா' படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் வெளியானது! | இன்று திருமணம் செய்து கொண்ட பிக்பாஸ் காதல் ஜோடி அமீர்- பாவனி ! | காலேஜ் ரவுடியாக நடிக்கும் சிம்பு! | 'ஜிங்குச்சா' - இரண்டு நாளில் இருபது மில்லியன் | தனது இயக்குனர்களுக்காக ஒரு அறிக்கை வெளியிடுவாரா அஜித்குமார்? | ‛ஆன்டி' கதாபாத்திரம்: கொதித்த சிம்ரன் | பிடிகொடுக்காத நடிகரால் அதிருப்தியில் பிரமாண்ட இயக்குனர் | ‛ஏஸ்' படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு வெளியானது! |
திரையுலக பிரபலங்கள் பெரும்பாலானோர் தற்போது இன்ஸ்டாகிராம் போன்ற சோசியல் மீடியாவில் ஆக்டிவாக இருக்கின்றனர். பலரும் தங்களது தகவல்களை ரசிகர்களுக்கு இவற்றின் மூலம்தான் தெரியப்படுத்துகின்றனர். அதேசமயம் சில விஷமிகள் இது போன்ற நட்சத்திரங்களின் கணக்குகளை ஹேக் செய்து அதில் விஷமத்தனமான செய்திகளை பரப்பி அவர்களை சங்கடத்திலும் சிலநேரம் சிக்கலிலும் சிக்க வைக்கின்றனர்.
அந்த வகையில் சமீபத்தில் நடிகர் துல்கர் சல்மான், தனது இன்ஸ்டாகிராம் கணக்கு ஹேக் செய்யப்பட்டதாகவும் ஒரு வழியாக தான் அதை மீட்டு விட்டதாகவும் அதில் இருந்து ஏதாவது மெசேஜ் வந்திருந்தால் அதை கண்டுகொள்ளாமல் தவிர்க்குமாறும் தகவல் வெளியிட்டிருந்தார்.
இந்த பரபரப்பு அடங்குவதற்குள் தனது இன்ஸ்டாகிராம் கணக்கும் ஹேக் செய்யப்பட்டுள்ளதாக கூறியுள்ளார் நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் பட நடிகை காயத்ரி. இதுகுறித்து காயத்ரி கூறுகையில், துல்கர்சல்மான் போலவே ஏதாவது மெசேஜ் வந்திருந்தால் அதை கண்டுகொள்ளாமல் தவிர்க்குமாறு வேண்டுகோள் விடுத்திருந்தார். அந்த பதிவுக்கு பதிலளித்துள்ள நடிகர் பிரேம்ஜி அவரிடமிருந்து தனக்கு ஒரு குறுஞ்செய்தி வந்ததாகவும் அதை கிளிக் செய்தபோது வேறு ஏதோ ஒரு வலைதள பக்கத்திற்கு அழைத்துச் சென்றதாகவும் கூறியுள்ளார்.