ராகினி எம்எம்எஸ் 3 திரில்லர் படத்தில் இணைந்த தமன்னா | தமிழைப் போலவே தெலுங்கிலும் அதிக தியேட்டர்களில் வெளியாகிறது கருப்பு | பெத்தி பட விழாவில் ஏ.ஆர்.ரஹ்மான் இசை நிகழ்ச்சி | கிரிக்கெட் வீரர் பயோபிக்கில் மீண்டும் இணையும் 'லகான்' கூட்டணி | அதிக பட்ஜெட், அதிக சம்பளம் : மாரி செல்வராஜ் படத்துக்கு சிக்கலா? | ரஜினிகாந்த், கமல்ஹாசன் இணையும் படம் இந்த சூழ்நிலையில் நடக்குமா? | திருப்பதி கோயிலில் சமுத்திரக்கனி வழிபாடு : விஜய்க்கு வாழ்த்து | திருமாவளவனை மறைமுகமாக விமர்சித்த நடிகை சனம் ஷெட்டி | பிரேமலு காமெடி நடிகருடன் மமிதா பைஜு ஜோடியாக நடிக்கும் புதிய படம் துவக்கம் | பெத்தி படப்பிடிப்பு தளத்திற்கு இயக்குனர் சுகுமாருடன் விசிட் அடித்த சிரஞ்சீவி |

மலையாள திரையுலக நடிகர் சங்கம் 'அம்மா' என்கிற பெயரில் செயல்பட்டு வருகிறது. கடந்த வருடம் நீதிபதி ஹேமா கமிஷன் அறிக்கை வெளியாகி அதன் காரணமாக நடிகர் சங்கத்தைச் சேர்ந்த பலர் குற்றச்சாட்டுகளுக்கு ஆளாகினர். அதற்கு தார்மீக பொறுப்பேற்ற சங்க தலைவரான மோகன்லால், நிர்வாகிகள் பலரோடு ராஜினாமா செய்தார். இதனை தொடர்ந்து தற்போது வரும் ஆகஸ்ட் 15ஆம் தேதி நடிகர் சங்கத்திற்கு புதிய தேர்தல் நடைபெற உள்ளது. இந்த சங்கத்தின் தலைவர் பதவிக்கு நடிகை ஸ்வேதா மேனன் மற்றும் வில்லன் நடிகர் தேவன் என இருவர் போட்டியில் இருக்கின்றனர். இதில் மோகன்லால், மம்முட்டி ஆதரவு பெற்ற ஸ்வேதா மேனன் தலைவராக வாய்ப்பு இருப்பதாக சொல்லப்படுகிறது.
இந்த நிலையில் மற்ற பொறுப்புகளுக்கு போட்டியிடும் வேட்பாளர்களின் பெயர் பட்டியல் வெளியிடப்பட்டது.. ஆச்சரியமாக இதில் இணை செயலாளர் பதவிக்கு போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார் நடிகை அன்சிபா ஹாசன். இவர் திரிஷ்யம் படத்தில் மோகன்லாலின் மூத்த மகளாக நடித்து புகழ்பெற்றவர். கடந்த பல வருட காலமாகவே நடிகர் சங்க செயல்பாடுகளில் தொடர்ந்து தன்னை ஈடுபடுத்திக் கொண்டு வருகிறார் அன்சிபா ஹாசன். அந்த வகையில் தேர்தல் நடப்பதற்கு முன்பே இவர் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது மலையாள திரையுலகில் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.