சந்தானத்தின் ‛லவ் பைட்' | ஆகஸ்ட் மாதத்திற்கு தள்ளிப்போகும் துல்கர் படம் | பிளாஷ்பேக் : போலீஸாக சில்க் ஸ்மிதா | பிளாஷ்பேக் : ஒற்றைக்காலில் நடித்தே உயிர் விட்டவர் | பாடல் சர்ச்சை : மகளிர் ஆணையம் முன்பு ஆஜராகி மன்னிப்பு கேட்ட நோரா பதேகி | சல்மான்கான் - நயன்தாரா படத்தின் டைட்டில் இதுதானா ? | கொல்லப்பட்ட விலங்கு நல ஆர்வலர் : கண்ணீருடன் வீடியோ வெளியிட்ட பார்வதி | திரிஷ்யம் 3 படத்தின் சென்சார் சான்றிதழ் வெளியானது | மக்கள் மன்னிக்கவே மாட்டார்கள் : விஜய்க்கு ஆதரவாக திரையுலகினர் குரல் | 50வது நாளில் 'யூத்' |

ஹிந்தியில் அமிதாப் பச்சன், டாப்சி நடிப்பில் வரவேற்பை பெற்ற ‛பிங்க்' படம் தமிழில் அஜித் நடிப்பில் நேர்கொண்ட பார்வை என்ற பெயரில் ரீ-மேக் ஆகி வரவேற்பை பெற்றது. வினோத் இயக்கினார். இந்த படம் வெளியாகி 4 ஆண்டுகளை கடந்த நிலையில் விமர்சகர் ஒருவர், 'நேர்கொண்ட பார்வை' படத்தில் நடித்தது அஜித் எடுத்த தவறான முடிவு என குறிப்பிட்டார்.
இதற்கு பதிலடி தந்த காயத்ரி, ‛‛ஒரு படத்தின் வெற்றி வசூல் எனும் அளவுகோலை தாண்டி சமூகத்தில் அது ஏற்படுத்தும் தாக்கத்தையும் பொருத்து இருக்க வேண்டும். பல ஆண்டுகளாக இந்த சமூகத்தில் விவாதிக்க வேண்டிய ஒரு விஷயத்தை இந்தபடம் மூலம் அஜித் துவங்கி வைத்துள்ளார்'' என தெரிவித்துள்ளார்.