டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
தான் இசையமைத்த படங்களின் பாடல்கள் ஒப்பந்தம் முடிந்த பிறகும் காப்புரிமை பெறாமல் இசை நிறுவனங்கள் பயன்படுத்தி வருவதாக இளையராஜா சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தார். அதோடு பாடல்களுக்கு உரிய காப்புரிமை பெறாமல் பயன்படுத்துவது ஒளிப்பதிவு சட்டப்படி தவறு. பதிப்புரிமை என்பது எந்த ஒரு மின்னணு வழிகளில் சேமித்து வைப்பது உட்பட எந்த ஒரு பொருளின் வடிவத்திலும் படைப்பை மீண்டும் உருவாக்குவதற்கான பிரத்யேக உரிமை என்றும் இளையராஜா தரப்பு வழக்கறிஞர் வாதிட்டுள்ளார். இதனைத்தொடர்ந்து இளையராஜாவின் பாடல்களை பயன்படுத்தி வந்த எக்கோ, அகி மியூசிக் போன்ற நிறுவனங்களுக்கு நீதிமன்றம் இடைக்கால தடை விதித்து தீர்ப்பு அளித்து இருக்கிறது. அதோடு, எக்கோ, அகி, கிரி டிரேட்டிங், யூனிசிஸ் ஆகிய இசை நிறுவனங்கள் மார்ச் 21-ஆம் தேதிக்குள் பதில் அளிக்குமாறு நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.