ஆக் ஷன் ரோல் என சொன்னதும் அப்பா சொன்ன வார்த்தை : கல்யாணி பிரியதர்ஷன் | ‛வட சென்னை' பின்னணியில் வெற்றிமாறன் - சிம்பு படம்: அதிகாரப்பூர்வமாக அறிவித்தார் தாணு | அக்டோபர் முதல் வாரத்தில் நெட்பிளிக்ஸில் வெளியாகும் ‛வார்-2' | சிவகார்த்திகேயனின் ‛மதராஸி' படத்தின் டிக்கெட் முன்பதிவு எத்தனை கோடி? | பைனான்ஸ் பிரச்னை காரணமாக ஜேசன் சஞ்சய் படத்தின் படப்பிடிப்பு நிறுத்தமா? | தனுஷின் ‛இட்லி கடை' படத்தை வெளியிடும் இன்பன் உதயநிதி! | உங்களை விட்டால் யார் இருக்கா ? அனுஷ்காவிடம் ராணா கலாட்டா | பிஜூமேனன் நடிப்பதாக இருந்த ‛கீர்த்தி சக்ரா' ; மோகன்லாலுக்கு கை மாறியது ஏன் ? இயக்குனர் மேஜர் ரவி புதிய தகவல் | நிவின்பாலியின் படங்களை பாராட்டிய பவன் கல்யாண் | ஏஆர் ரஹ்மான் இசையமைப்பில் வசனம் இல்லாமல் வெளியாகும் ‛உப் யே சியாபா' |
'இசை மும்மூர்த்திகளை எல்லோருக்கும் மேலானவர்கள் என்று கூறலாம், ஆனால் இசையமைப்பாளர் இளையராஜா எல்லோருக்கும் மேலானவர் இல்லை' என ஐகோர்ட் நீதிபதி தெரிவித்துள்ளார்.
4,500 படல்களுக்கும் மேல் இசையமைத்துள்ளார் இளையராஜா. அவரது பாடல்களை எக்கோ, அகி உள்ளிட்ட இசை நிறுவனங்கள், ஒப்பந்த காலம் முடிந்த பின்பும் பயன்படுத்தி வருவதாக, காப்புரிமை கேட்டு சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில், இளையராஜாவின் பாடல்களை பயன்படுத்த, இசை நிறுவனங்களுக்கு உரிமை உள்ளது என கோர்ட் தீர்ப்பளித்தது.
இதனை எதிர்த்து இளையராஜா தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. கடந்த ஏப்.,10ம் தேதி, ஐகோர்ட் நீதிபதிகள் ஆர் மகாதேவன், முகமது ஷபிக் அமர்வில் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது, இளையராஜா தரப்பு வக்கீல், 'இளையராஜா அனைவருக்கும் மேலானவர்' என்ற கருத்தை முன்வைத்தார். பின் இந்த வழக்கு விசாரணை 17 ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது.
இந்நிலையில், நேற்று இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது ஐகோர்ட் நீதிபதி ஆர். மகாதேவன், 'இசை மும்மூர்த்திகளான முத்துசுவாமி தீக்ஷிதர், தியாகராஜர் மற்றும் சியாமா சாஸ்திரிகள் தான் எல்லோருக்கும் மேலானவர்கள் என்று கூறலாம்; ஆனால் நீங்கள் இசையமைப்பாளர் இளையராஜாவை அப்படிச் சொல்வதைக் கேட்க முடியாது' என தெரிவித்தார். இதனை தொடர்ந்து இந்த வழக்கு விசாரணை 24ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது.