இரவில் சிரித்து பேசிய தந்தையை காலையில் உயிருடன் பார்க்கவில்லை : ஷைன் டாம் சாக்கோ உருக்கம் | இசையமைப்பாளர் ஆனார் இளையராஜா பேரன் | விடுமுறை நாளிலும் வசூலில் ஏமாற்றிய தக் லைப் | நாக சைதன்யாவை காதலித்தபோது கழுத்தின் பின்பகுதியில் குத்திய டாட்டூவை நீக்கிய சமந்தா | தக் லைப் படத்தை புகழ்ந்து பதிவிட்ட இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் | சூப்பர் ஹீரோயினாக மாறிய கல்யாணி பிரியதர்ஷன் | ஷோபனாவை அவமதித்த ஊழியர் : படப்பிடிப்பு தளத்தையே நடுங்க வைத்த அமிதாப் பச்சன் | உன்னி முகுந்தன் பிரச்னையில் தலையிட்டு தீர்த்து வைத்த பெப்கா | நடிகையின் தங்கை நகைக்கடையில் 69 லட்சம் நூதன மோசடி செய்த ஊழியர்கள் | விபத்தில் சிக்கிய வில்லன் நடிகரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய சுரேஷ்கோபி |
தெலுங்குத் திரையுலகத்தின் சீனியர் ஹீரோவான சிரஞ்சீவி இரு தினங்களுக்கு முன்பு ஐதராபாத்தில் உள்ள பிரம்மாண்ட ராமானுஜர் சிலையை தரிசித்தார். பத்து நாட்களுக்கு முன்புதான் அந்த சிலையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்.
அதற்கடுத்து கேரளாவில் உள்ள கோயில்களுக்குச் சென்று சிரஞ்சீவி தரிசனம் செய்து வருகிறார். மனைவி சுரேகாவுடன் குருவாயூர் கிருஷ்ணன் கோவிலுக்கும் மற்றும் சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கும் சென்று தரிசனம் செய்துள்ளார். அங்கு கோவில் நிர்வாகிகள் அவரை வரவேற்று தரிசனத்துக்கான ஏற்பாடுகளை செய்து தந்துள்ளனர்.
சபரிமலை கோயிலுக்குச் சென்ற புகைப்படங்களை அவர் சமூகவலைதளத்திலும் பதிவிட்டுள்ளார். “நீண்ட இடைவெளிக்குப் பிறகு சபரிமலைப் பயணம். கூட்டத்தாலும், என்னை அடையாளம் கண்டு கொண்டு உற்சாகமடைவதைத் தவிர்க்கவும், கோயிலுக்குச் செல்ல 'டோலி' சேவையைப் பயன்படுத்தினோம். அதைத் தூக்கிச் சென்றவர்களுக்கு என்னுடைய நன்றி,” என டோலி தூக்கியவர்களுக்கு நன்றி தெரிவித்து வணக்கம் சொல்லும் புகைப்படத்தையும் பகிர்ந்துள்ளார்.
சமீபத்தில் கொரானோவால் பாதிக்கப்பட்டு உடல்நலம் தேறியதால் சிரஞ்சீவி ஆன்மீகப் பயணம் மேற்கொண்டுள்ளதாகத் தெரிகிறது.