விண்வெளியில் நான்காவது திருமணம் செய்கிறாரா ஹாலிவுட் நடிகர் டாம் குரூஸ் | அஜித் 64வது படத்தின் அறிவிப்பு எப்போது? : ஆதிக் ரவிச்சந்திரன் தகவல் | ஓடிடிக்கு வருகிறது லோகா சாப்டர் 1 | டியூட் படத்தில் பிரதீப் பாடிய ‛சிங்காரி' பாடல் வெளியானது | தனுஷ் படத்தின் நாயகி யார்... நீடிக்கும் குழப்பம்? | ஜீவா, ராஜேஷ் படத்தில் இணையும் ரம்யா ரங்கநாதன் | ‛பேராண்டி' படத்தில் மனோரமா பாடிய கடைசி பாடல் | 'பைசன்' என் முதல் படம் மாதிரி: துருவ் விக்ரம் | தீபாவளி ரேசில் இன்னொரு படம் : ஆனாலும், ரசிகர்கள் பாடு திண்டாட்டம் | சிறு பட்ஜெட் படத்திற்காக சம்பளம் குறைத்து வாங்கிய கவிஞர் நா.முத்துகுமார் |
தெலுங்குத் திரையுலகத்தின் சீனியர் ஹீரோவான சிரஞ்சீவி இரு தினங்களுக்கு முன்பு ஐதராபாத்தில் உள்ள பிரம்மாண்ட ராமானுஜர் சிலையை தரிசித்தார். பத்து நாட்களுக்கு முன்புதான் அந்த சிலையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்.
அதற்கடுத்து கேரளாவில் உள்ள கோயில்களுக்குச் சென்று சிரஞ்சீவி தரிசனம் செய்து வருகிறார். மனைவி சுரேகாவுடன் குருவாயூர் கிருஷ்ணன் கோவிலுக்கும் மற்றும் சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கும் சென்று தரிசனம் செய்துள்ளார். அங்கு கோவில் நிர்வாகிகள் அவரை வரவேற்று தரிசனத்துக்கான ஏற்பாடுகளை செய்து தந்துள்ளனர்.
சபரிமலை கோயிலுக்குச் சென்ற புகைப்படங்களை அவர் சமூகவலைதளத்திலும் பதிவிட்டுள்ளார். “நீண்ட இடைவெளிக்குப் பிறகு சபரிமலைப் பயணம். கூட்டத்தாலும், என்னை அடையாளம் கண்டு கொண்டு உற்சாகமடைவதைத் தவிர்க்கவும், கோயிலுக்குச் செல்ல 'டோலி' சேவையைப் பயன்படுத்தினோம். அதைத் தூக்கிச் சென்றவர்களுக்கு என்னுடைய நன்றி,” என டோலி தூக்கியவர்களுக்கு நன்றி தெரிவித்து வணக்கம் சொல்லும் புகைப்படத்தையும் பகிர்ந்துள்ளார்.
சமீபத்தில் கொரானோவால் பாதிக்கப்பட்டு உடல்நலம் தேறியதால் சிரஞ்சீவி ஆன்மீகப் பயணம் மேற்கொண்டுள்ளதாகத் தெரிகிறது.