எனக்கும் ஒரு எதிர்காலம் உள்ளது... வதந்தி பரப்பாதீங்க : பவித்ரா லட்சுமி | பிரியங்கா மோகனின் துருக்கி கனவு நனவானது | லவ் இன்ஷுரன்ஸ் கம்பெனி - அப்டேட் கொடுத்த விக்னேஷ் சிவன் | கார் பந்தய பயிற்சியின்போது மீண்டும் விபத்தில் சிக்கிய அஜித் | ரீ-ரிலீஸில் சச்சின் படத்தின் முதல் நாள் வசூல் எவ்வளவு | விவாகரத்து நெருங்கிவிட்டது என பதிவு போட்ட ரசிகருக்கு சோனாக்ஷி கொடுத்த பதிலடி | ரயில் ஜன்னல் கம்பி வழியாக மாளவிகா மோகனனிடம் முத்தம் கேட்ட மர்ம நபர் | ரெட்ரோ படத்தின் டிரைலரை உருவாக்கிய அல்போன்ஸ் புத்ரன் | கேரள அரசு விருதை கட்டி அணைத்தபடி தூங்கிய பிரேமலு நடிகர் : வைரலாகும் புகைப்படம் | போதை பொருள் வழக்கு : நடிகர் சைன் டாம் சாக்கோ கைது |
தெலுங்குத் திரையுலகத்தின் சீனியர் ஹீரோவான சிரஞ்சீவி இரு தினங்களுக்கு முன்பு ஐதராபாத்தில் உள்ள பிரம்மாண்ட ராமானுஜர் சிலையை தரிசித்தார். பத்து நாட்களுக்கு முன்புதான் அந்த சிலையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்.
அதற்கடுத்து கேரளாவில் உள்ள கோயில்களுக்குச் சென்று சிரஞ்சீவி தரிசனம் செய்து வருகிறார். மனைவி சுரேகாவுடன் குருவாயூர் கிருஷ்ணன் கோவிலுக்கும் மற்றும் சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கும் சென்று தரிசனம் செய்துள்ளார். அங்கு கோவில் நிர்வாகிகள் அவரை வரவேற்று தரிசனத்துக்கான ஏற்பாடுகளை செய்து தந்துள்ளனர்.
சபரிமலை கோயிலுக்குச் சென்ற புகைப்படங்களை அவர் சமூகவலைதளத்திலும் பதிவிட்டுள்ளார். “நீண்ட இடைவெளிக்குப் பிறகு சபரிமலைப் பயணம். கூட்டத்தாலும், என்னை அடையாளம் கண்டு கொண்டு உற்சாகமடைவதைத் தவிர்க்கவும், கோயிலுக்குச் செல்ல 'டோலி' சேவையைப் பயன்படுத்தினோம். அதைத் தூக்கிச் சென்றவர்களுக்கு என்னுடைய நன்றி,” என டோலி தூக்கியவர்களுக்கு நன்றி தெரிவித்து வணக்கம் சொல்லும் புகைப்படத்தையும் பகிர்ந்துள்ளார்.
சமீபத்தில் கொரானோவால் பாதிக்கப்பட்டு உடல்நலம் தேறியதால் சிரஞ்சீவி ஆன்மீகப் பயணம் மேற்கொண்டுள்ளதாகத் தெரிகிறது.