பிரமானந்தம் - யோகிபாபு சந்திப்பு ஏன்? | ஆந்திரா மதுபான ஊழல் ; விசாரணை வளையத்தில் நடிகை தமன்னா : கோலிவுட் போல் டோலிவுட்டும் கலக்கம் | 3 மணி நேரம் ஓடப் போகும் 'வார் 2' | வாழ்க்கை என்பது ஒரு வட்டம் ; ராஷி கண்ணாவின் புதிய மகிழ்ச்சி | ஸ்வேதா மேனன் மீது எப்ஐஆர் பதிவு ; நடிகர் சங்கத் தேர்தலில் போட்டியிட விடாமல் தடுக்கும் முயற்சியா? | நீங்க எனக்கு இன்ஸ்பிரேசன் : சிம்ரனை பாராட்டிய திரிஷா | இதுவே உங்கள் மகளாக இருந்தால் என்ன செய்வீர்கள் ? மம்முட்டியிடம் கேள்வி எழுப்பிய பெண் தயாரிப்பாளர் | இதைவிட பெருமை என்ன இருக்கு : முதல்வர் சந்திப்பு குறித்து நடிகை எம்.என்.ராஜம் நெகிழ்ச்சி | தனுஷின் சகோதரிகளை இன்ஸ்டாகிராமில் பின்தொடரும் மிருணாள் தாக்கூர் | 'புஷ்பா 2' தியேட்டர் நெரிசல் விவகாரம்: மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ் |
சிவா இயக்கத்தில் நடித்த அண்ணாத்த படத்திற்கு பிறகு ரஜினியின் 169வது படத்தை யார் இயக்கப் போகிறார்கள் என்பது இப்போதுவரை சஸ்பென்ஸாக இருந்து வருகிறது. கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படத்தை இயக்கிய தேசிங்கு பெரியசாமி, ரஜினியின் அடுத்த படத்தை இயக்குவதாக பல மாதங்களாகவே செய்திகள் வெளியாகின. அதையடுத்து கே.எஸ். ரவிக்குமார், கார்த்திக் சுப்பராஜ், பால்கி போன்றவர்களும் அந்த பட்டியலில் இடம் பிடித்தார்கள். நேற்று கூட வெற்றிமாறன் இயக்க போவதாக தகவல் வந்தது.
இந்நிலையில் தற்போது வெளியாகியுள்ள ஒரு தகவலில் ரஜினியின் 169வது படத்தை விஜய் நடித்துள்ள பீஸ்ட் படத்தை இயக்கியிருக்கும் நெல்சன் இயக்கப் போவதாக ஒரு செய்தி வெளியாகி இருக்கிறது. நெல்சன் இயக்கிய கோலமாவு கோகிலா, டாக்டர், பீஸ்ட் படங்களுக்கு இசையமைத்துள்ள அனிருத்தே இந்த படத்திற்கும் இசையமைக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.