இந்த முட்டாள் யார் : ஸ்ரேயா கோபம் | பெண் குழந்தைக்கு அப்பாவான பிரேம்ஜி அமரன் | டிச., 8ல் துவங்கும் சூர்யா 47 பட படப்பிடிப்பு | தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் கடும் போட்டி | ஏகனுக்கு ஜோடியாக இரண்டு நாயகிகள் | நலமாக இருந்தால்தான் நல்லதைத் தர முடியும்: தீபிகா படுகோனே | ஒரு வாரம் தள்ளிப்போகும் ‛வா வாத்தியார்' | தனுஷ், அவரது மேலாளர் பற்றிய சர்ச்சை : முற்றுப்புள்ளி வைத்த மான்யா ஆனந்த் | 9 படங்களில் நடிக்கும் நயன்தாரா : இந்தியாவிலே இவர்தான் டாப் | ரீ ரிலீஸ் படங்கள் முடிவுக்கு வருகிறதா? |

தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகைகளில் ஒருவர் கீர்த்தி சுரேஷ். ஆனால், தெலுங்கில் அவர் நடித்து வெளிவந்த 'மகாநடி' படத்திற்குப் பிறகு அவர் நடித்து தமிழ், தெலுங்கில் வெளிவந்த 8 படங்கள் தோல்விப் படங்களாக அமைந்தன. விஜய்யுடன் நடித்த 'சர்க்கார்' படம் மட்டுமே வெற்றிப் படமாக அமைந்தது. சமீபத்தில் தெலுங்கில் வெளிவந்த 'குட் லக் சகி' படம் கூட தோல்வியடைந்தது.
தொடர்ச்சியாக கீர்த்தி சுரேஷ் நடித்த படங்கள் தோல்வியடைந்தது குறித்து சமூக வலைத்தளங்களிலும், பல்வேறு ஊடகங்களிலும் செய்திகள் வெளிவந்தன. அவற்றிற்குப் பதில் தரும் விதமாக சில கிளாமரான புகைப்படங்களைப் பதிவிட்டு அவற்றோடு ,“எப்போதும் திரும்பிப் பார்ப்பதில்லை, கேமரா இருந்தால் மட்டுமே…” என கருத்தும் சொல்லியிருக்கிறார்.
தொடர்ந்து தோல்விப் படங்கள் என்றாலும் தற்போது தெலுங்கில் சிரஞ்சீவி மகேஷ் பாபு ஆகியோருடன் நடித்து வருகிறார் கீர்த்தி. தமிழில் முதன்மைக் கதாநாயகியாக நடித்துள்ள 'சாணி காயிதம்' விரைவில் ஓடிடியில் வெளியாக உள்ளது. மலையாளத்திலும் 'வாஷி' என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார்.