கிரிக்கெட் வீரருடன் டேட்டிங் செய்யும் மிருணாள் தாக்கூர்! | 'அட்டகாசம், அஞ்சான்' ரீ ரிலீஸ்: வசூல் நிலவரம் என்ன? | மீண்டும் இயக்குனராக களமிறங்கும் சமுத்திரக்கனி! | சுந்தர். சி, விஷால் படத்தின் புதிய அப்டேட்! | தனுஷுக்கு வசூலில் புதிய மைல்கல் ஆக அமையும் 'தேரே இஸ்க் மே' | கிறிஸ்துமஸ் வாரத்தை முன்னிட்டு திரைக்கு வரும் 'கொம்பு சீவி' | அரசுக்கே 'ஆப்பு' அடிக்கப்பார்த்த ஆர்.கே.செல்வமணி: முறைகேடுகளை மறைக்க முயற்சி? | புரோட்டா நடிகருக்கு 'ஷாக்' கொடுத்த அமரன் | 'நாயகி' ஆன பேஷன் டிசைனர் சுஷ்மா நாயர் | மன வருத்ததுடன் பாலிவுட் பக்கம் கவனத்தை திருப்பும் ராஷி கண்ணா ; காரணம் இதுதான் |

தெலுங்கில் நாக் அஸ்வின் இயக்கத்தில் பிரபாஸ், அமிதாப் பச்சன், தீபிகா படுகோனே ஆகியோர் நடிக்கும் சயின்ஸ் திரில்லர் படத்தின் படப்பிடிப்பு ஏற்கனவே ஐதராபாத்தில் நடைபெற்றது. அப்போது அமிதாப்பச்சன் சம்பந்தப்பட்ட காட்சிகள் படமாக்கப்பட்ட நிலையில் கொரோனா தொற்று காரணமாக படப்பிடிப்பு தள்ளிவைக்கப்பட்டது. இந்நிலையில் ப்ராஜெக்ட் கே(தற்காலிகமாக) என்று பெயர் வைக்கப்பட்டுள்ள அந்த படத்தின் படப்பிடிப்பு பிப்ரவரி இரண்டாம் வாரத்தில் மீண்டும் தொடங்குகிறது. அப்போது பிரபாஸ் - தீபிகா படுகோனே இணைந்து நடிக்கும் காட்சிகள் படமாக்கப்பட உள்ளது.
தற்போது பிரபாஸின் ராதே ஷ்யாம் ரிலீசுக்கு தயாராகி விட்ட நிலையில், அதையடுத்து அவர் நடித்து வந்த ஆதி புருஷ், சலார் படங்களின் படப்பிடிப்பும் முடிந்து இறுதிகட்டப் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. அதனால் புராஜெக்ட் கே படத்தில் முழுவீச்சில் நடித்து முடிக்க கால்சீட் கொடுத்திருக்கிறார்.