டிவி நிகழ்ச்சியில் சவுந்தர்யாவை நினைத்து கண் கலங்கிய ரம்யா கிருஷ்ணன் | மீண்டும் பாலகிருஷ்ணா ஜோடியாக நயன்தாரா நடிப்பது ஏன் | ‛டூரிஸ்ட் பேமிலி' இயக்குனருக்கு பிஎம்டபுள்யூ கார் பரிசு | மாதவன், கங்கனா படத்தின் தலைப்பு என்ன தெரியுமா? | என் துயரத்தை சிலர் கொண்டாடினர் : சமந்தா | போலீஸ் வேடத்தில் சசிகுமார் | 64வது படத்தில் நடிக்க சம்பளத்தை உயர்த்தினாரா அஜித்குமார்? | தமிழ் புத்தாண்டில் சூர்யா-சிம்பு மோதிக்கொள்கிறார்களா? | 'மா இண்டி பங்காரம்' படத்திற்காக தீவிர ஒர்க் அவுட்டில் இறங்கிய சமந்தா! | விஜய் ஆண்டனியின் 'சக்தி திருமகன்' படத்தை பாராட்டிய இயக்குனர் ஷங்கர்! |

தனுஷை விட்டு பிரிவதாக அறிவித்ததை அடுத்து காதலர் தினத்திற்காக ஒரு ஆல்பம் இயக்கும் பணிகளில் ஈடுபட்டார் நடிகர் ரஜினியின் மூத்த மகளும், இயக்குனருமான ஐஸ்வர்யா. இதற்காக ஐதராபாத் சென்று ஆலோசனை நடத்தினார். ஆனால் படப்பிடிப்பை தொடங்குவதற்கு முன்பு கொரோனா தொற்று ஏற்பட்டதால் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார். இது குறித்த தகவலை அவர் தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்திருந்தார். இந்நிலையில் தற்போது ஐஸ்வர்யா ரஜினி கொரோனாவிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளார். நாளை முதல் ஐதராபாத் சென்று ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் மியூசிக் வீடியோவின் படப்பிடிப்பை தொடங்குகிறார். மூன்று நாட்கள் இதற்கான படப்பிடிப்பை நடத்தி காதலர் தினத்திற்குள் இந்த ஆல்பத்தை வெளியிட திட்டமிட்டுள்ளார் ஐஸ்வர்யா ரஜினி.