ஜனநாயகன் குறித்து மகிழ்ச்சியான செய்தி | கலாபவன் மணியின் கனவை நனவாக்கிய மகள் | பேட்ரியாட் படத்தை திரையிடுவதில் கேரள திரையரங்குகள் திடீர் போர்க்கொடி | ஆக்ஷன் மோட் ஆன் : துரந்தர் 2 டிரைலர் வெளியானது | திருமணத்திற்கு ஜோடியாக வந்ததற்கு பதிலடிதான் சங்கீதாவின் புதிய மனு ? | சிரஞ்சீவி, கமல் உள்ளிட்டோருக்கு 2025ன் தெலங்கானா மாநில சினிமா விருதுகள் அறிவிப்பு | 'மேட் இன் கொரியா' இயக்குனர் மனைவியின் கதை : பிரியங்கா மோகன் | இசையில் மட்டும்தான் கவனம்: நடிப்பு தகவலுக்கு முற்றுப்புள்ளி வைத்த சாய் அபயங்கர் | ப்ளடி பாலிட்டிக்ஸ் : கொடி கம்ப அரசியல் | சந்தானம் ஜோடியான கோபிகா ரமேஷ் |

தனுஷை விட்டு பிரிவதாக அறிவித்ததை அடுத்து காதலர் தினத்திற்காக ஒரு ஆல்பம் இயக்கும் பணிகளில் ஈடுபட்டார் நடிகர் ரஜினியின் மூத்த மகளும், இயக்குனருமான ஐஸ்வர்யா. இதற்காக ஐதராபாத் சென்று ஆலோசனை நடத்தினார். ஆனால் படப்பிடிப்பை தொடங்குவதற்கு முன்பு கொரோனா தொற்று ஏற்பட்டதால் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார். இது குறித்த தகவலை அவர் தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்திருந்தார். இந்நிலையில் தற்போது ஐஸ்வர்யா ரஜினி கொரோனாவிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளார். நாளை முதல் ஐதராபாத் சென்று ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் மியூசிக் வீடியோவின் படப்பிடிப்பை தொடங்குகிறார். மூன்று நாட்கள் இதற்கான படப்பிடிப்பை நடத்தி காதலர் தினத்திற்குள் இந்த ஆல்பத்தை வெளியிட திட்டமிட்டுள்ளார் ஐஸ்வர்யா ரஜினி.




