வேண்டுமென்றே சர்ச்சை... நீக்காவிட்டால் சட்ட நடவடிக்கை: ராஷ்மிகா எச்சரிக்கை | சிம்புவை அணுகிய சூர்யா 47 படக்குழு | பிளாஷ்பேக்: பாடலாசிரியராக, வசனகர்த்தாவாக கலையுலகின் கவனம் ஈர்த்த இயக்குநர் கே எஸ் கோபாலகிருஷ்ணன் | காமெடி கலந்த க்ரைம் த்ரில்லர் படங்கள்: இந்த வார ஓடிடி வரவுகள்...! | மகேஷ் பாபு ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்ட பவன் கல்யாண் பட இயக்குனர் | தள்ளிப்போகிறதா 'பேட்ரியாட்' ரிலீஸ் ? தேதி குறிப்பிடாமல் வெளியான போஸ்டர் | சாய் பல்லவி நடித்துள்ள ஏக் தின் ஹிந்தி படத்தின் டிரைலர் வெளியானது | மும்பை துப்பாக்கிச்சூடு சம்பவத்தை மையப்படுத்தி உருவாகும் படத்தில் செவிலியராக நடிக்கும் கங்கனா | என் மனைவி ஆர்த்தி இல்லை என்றால் தயாரிப்பாளராகி இருக்க மாட்டேன் : சிவகார்த்திகேயன் | ஸ்வேதா மேனன் மீதான வழக்கை தள்ளுபடி செய்த உயர்நீதிமன்றம் |

வெங்கட் பிரபு இயக்கத்தில், யுவன்ஷங்கர் ராஜா இசையமைப்பில், சிலம்பரசன், கல்யாணி பிரியதர்ஷன், எஸ்ஜே சூர்யா மற்றும் பலர் நடித்து கடந்த வருடம் நவம்பர் மாதம் 25ம் தேதி வெளியானது.
விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் பெரிய வரவேற்பையும், வெற்றியையும் பெற்ற படம். இன்றுடன் இப்படம் வெளிவந்து 75 நாட்கள் ஆகிறது. சென்னையில் உள்ள ரோகிணி திரையரங்கில் மாலைக் காட்சியாக இப்படம் ஓடிக் கொண்டிருக்கிறது.
இன்று படம் 75வது நாளைக் கொண்டாடுவது மகிழ்ச்சியான ஒரு விஷயம்தான். கடந்த சில வருடங்களாக வசூல் ரீதியாக வரவேற்பைப் பெறும் படங்கள் கூட 50 நாட்களைக் கடந்து ஓடுவது பெரிய விஷயமாகவே இருக்கிறது. இருப்பினும் படத்தின் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி இந்த கொண்டாட்டத்துக்கிடையேயும் வருத்தமான பதிவு ஒன்றை சோஷியல் மீடியா பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
அதில், “75 நாட்கள் ஆகியும் இன்னமும் வினியோகஸ்தர்கள் கணக்கு ஒப்படைக்கவில்லை. ஒரு வெற்றிப்படத்திற்கே இந்த நிலைன்னா…மற்ற படங்களின் நிலையை என்ன சொல்ல??! இப்படி இருந்தால் எப்படி தொழில் செய்ய??!, நடிகர்கள், தயாரிப்பாளர்கள் ஓடிடி பக்கம் போறதுல என்ன தப்பு இருக்குன்னு யோசிக்க வைக்குறாங்க..,” என்று பதிவிட்டுள்ளார்.
சிம்புவுக்கு பெரிய திருப்புமுனையை ஏற்படுத்திக் கொடுத்தது இந்தப் படம். ஆனால், படத்தின் தயாரிப்பாளருக்கும், சிம்புவுக்கும் இடையே பிரச்னை ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிட வேண்டிய ஒன்று.




