லோகேஷ் கனகராஜ் இயக்கும் ‛கைதி -2' படத்தில் நடிக்கவில்லை! -அனுஷ்கா மறுப்பு | திரில்லர் கதையை படமாக்கும் பிரேம்குமார்! பிரதீப் ரங்கநாதன் நடிக்கிறார்!! | கமலின் 237வது படம் டிராப் ஆகிவிட்டதா? | சண்முக பாண்டியன் நடித்துள்ள ‛படை தலைவன்' படத்தின் இரண்டு நாள் வசூல் எவ்வளவு? | ஸ்ரீ லீலாவுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து சுதா கொங்கரா வெளியிட்ட வீடியோ! | எம்.பி.,யான கமல்ஹாசன்; சினிமா வளர்ச்சிக்காக குரல் கொடுப்பாரா? | நல்ல கதைக்காக காத்திருக்கும் ஜோதிகா | அடுத்த படத்துல ஹீரோயின் உண்டா? சண்முக பாண்டியன் பதில் | ஜனநாயகன் பட இசை வெளியீட்டு விழா நடக்குமா? | விஜய் மில்டன் இயக்கத்தில் இரண்டாம் முறையாக இணைந்த அம்மு அபிராமி! |
வெங்கட் பிரபு இயக்கத்தில், யுவன்ஷங்கர் ராஜா இசையமைப்பில், சிலம்பரசன், கல்யாணி பிரியதர்ஷன், எஸ்ஜே சூர்யா மற்றும் பலர் நடித்து கடந்த வருடம் நவம்பர் மாதம் 25ம் தேதி வெளியானது.
விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் பெரிய வரவேற்பையும், வெற்றியையும் பெற்ற படம். இன்றுடன் இப்படம் வெளிவந்து 75 நாட்கள் ஆகிறது. சென்னையில் உள்ள ரோகிணி திரையரங்கில் மாலைக் காட்சியாக இப்படம் ஓடிக் கொண்டிருக்கிறது.
இன்று படம் 75வது நாளைக் கொண்டாடுவது மகிழ்ச்சியான ஒரு விஷயம்தான். கடந்த சில வருடங்களாக வசூல் ரீதியாக வரவேற்பைப் பெறும் படங்கள் கூட 50 நாட்களைக் கடந்து ஓடுவது பெரிய விஷயமாகவே இருக்கிறது. இருப்பினும் படத்தின் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி இந்த கொண்டாட்டத்துக்கிடையேயும் வருத்தமான பதிவு ஒன்றை சோஷியல் மீடியா பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
அதில், “75 நாட்கள் ஆகியும் இன்னமும் வினியோகஸ்தர்கள் கணக்கு ஒப்படைக்கவில்லை. ஒரு வெற்றிப்படத்திற்கே இந்த நிலைன்னா…மற்ற படங்களின் நிலையை என்ன சொல்ல??! இப்படி இருந்தால் எப்படி தொழில் செய்ய??!, நடிகர்கள், தயாரிப்பாளர்கள் ஓடிடி பக்கம் போறதுல என்ன தப்பு இருக்குன்னு யோசிக்க வைக்குறாங்க..,” என்று பதிவிட்டுள்ளார்.
சிம்புவுக்கு பெரிய திருப்புமுனையை ஏற்படுத்திக் கொடுத்தது இந்தப் படம். ஆனால், படத்தின் தயாரிப்பாளருக்கும், சிம்புவுக்கும் இடையே பிரச்னை ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிட வேண்டிய ஒன்று.