நேரடியாக ஓடிடியில் வெளியாகும் கீர்த்தி சுரேஷ் படம் | 22 ஆண்டு காத்திருப்பு : விஷ்ணு மஞ்சு நெகிழ்ச்சி | யாருக்கு யார் வில்லன்? மோகன்லால் மோகன்பாபு போட்டாபோட்டி | மருத்துவர்களின் அலட்சியத்தால் செல்லப்பூனை மரணம் ; திலீப் பட இயக்குனர் போலீசில் புகார் | லண்டனில் கங்குலியுடன் சந்திப்பு ; பிரமித்து விலகாத நவ்யா நாயர் | குபேராவை கேரளாவில் வெளியிடும் துல்கர் சல்மான் | 'தொடரும்' படத்தின் கதை என்னுடையது ; வில்லங்க இயக்குனரின் புதிய சர்ச்சை | 'தி ராஜா சாப்' டீசர் : ஹிந்தி, தெலுங்கு பார்வைகளில் போட்டி | மைனா நந்தினியின் 'குட் டே' | உறுப்பினர் அட்டை இல்லாமல் சினிமாவில் நடிக்க முடியாது : விஷால் அறிக்கை |
நடிகை கீர்த்தி சுரேஷும் சமந்தாவும் மகாநடி என்கிற படத்தில் இணைந்து நடித்தனர். அப்போதிருந்து இருவரும் நல்ல நண்பர்களாகவும் மாறிவிட்டனர். இந்த நிலையில் கீர்த்தி சுரேஷ் தனது சமூக வலைதளப் பக்கத்தில் ஒரு வீடியோவை பகிர்ந்து சமந்தாவுக்கு ஒரு வேண்டுகோளும் வைத்திருக்கிறார். அதாவது சமீபத்தில் கீர்த்தி சுரேஷ் தனது படப்பிடிப்பு தளத்தில் ஒரு அழகிய குட்டி பெண்ணை சந்தித்து, அவரிடம் உனக்கு வருங்காலத்தில் யார் போல ஆவதற்கு விருப்பம் என கேட்கிறார்.
அதற்கு அந்த குழந்தை சமந்தாவை போல வரவேண்டும் என தன் விருப்பத்தை சொல்கிறது. இந்த வீடியோவை வெளியிட்டு, சமந்தா உன்னுடைய மிகப்பெரிய தீவிரமான ரசிகை இங்கே இருக்கிறார். அவரை நீ ஒரு முறையேனும் சந்திக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார் கீர்த்தி சுரேஷ். இதற்கு பதிலளித்துள்ள சமந்தா யார் இந்த அழகு குட்டி என்று கேள்வி கேட்டுள்ளார்.