Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

சந்தானம் நியாயம் சொல்லாவிட்டால் தற்கொலை செய்வேன்! உதவி இயக்குனர்

06 ஜன, 2013 - 17:11 IST
எழுத்தின் அளவு:

எனது கதையை திருடி படமாக்கிவிட்டார் சந்தானம். இதனால் மன உளைச்சலுக்கு ஆளாகி உள்ளேன், எனக்கு நியாயம் கிடைக்காவிட்டால் தற்கொலை செய்வேன் என உதவி இயக்குனர் ஒருவர் வேதனையுடன் கூறியுள்ளார். நடிகர் சந்தானம் ஹீரோவாக நடித்து வரும் படம் கண்ணா லட்டு திண்ண ஆசையா. இப்படத்தை மணிகண்டன் என்பவர் இயக்குகிறார்.

இந்நிலையில் இப்படத்தின் கதை தன்னுடையது என்று உதவி இயக்குனர் நவீன் சுந்தர் என்பவர் புகார் கூறியுள்ளார். இதுதொடர்பாக அவர் கூறியுள்ளதாவது, நான் டைரக்டர்கள் மகேந்திரன், ராபர்ட் ராஜசேகரன், ஸ்டான்லி, ரவிச்சந்திரன் உள்ளிட்டவர்களிடம் உதவி இயக்குனராக பணியாற்றியுள்ளேன். சினிமாவுக்கு வந்து கிட்டத்தட்ட 20 வருடங்கள் ஆகிவிட்டது. இரண்டு ஆண்டுக்கு முன்னர் அன்புள்ள சிம்பு என்ற பெயரில் ஒரு கதையை ரெடி பண்ணி அதில் சந்தானத்தை ஹீரோவாகவும், சிம்புவை சிறப்பு தோற்றத்தில் நடிக்க வைக்கவும் எண்ணியிருந்தேன். அதை டைரக்டர் ஸ்ரீநாத்திடம் சொன்னேன். அவர் சந்தானத்திடம் என்னை அனுப்பி வைத்தார். சந்தானத்திடமும் கதை சொன்னேன். அவருக்கு பிடித்து போய் சிம்புவிடம் கால்ஷீட் வாங்கிய பிறகு படத்தை ஆரம்பிக்கலாம் என்றார். ஆனால் இப்போது எனது கதையிலேயே கண்ணா லட்டு திண்ண ஆசையா என்ற பெயரில் படத்தை எடுத்துள்ளதை கண்டு அதிர்ச்சியடைந்தேன்.

எனது கதையை திருடி படமாக்கிவிட்டார் சந்தானம். இதுதொடர்பாக சாந்தானத்தை தொடர்பு கொண்டு பேசியபோது அவர் என்னை தவிர்க்கிறார். இதனால் மிகுந்த மனஉளைச்சலுக்கு ஆளாகியுள்ளேன். சந்தானம் எனக்கு உரிய நியாயம் சொல்லாவிட்டால், அவருக்கு எதிராக உண்ணாவிரதம் இருப்பேன். அப்படியும் அவர் செவி சாய்க்கவில்லை என்றால் இறுதியாக தற்கொலை செய்து கொள்வேன்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Advertisement
கருத்துகள் (10) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (10)

காளை - KOCHCHI ,இந்தியா
16 ஜன, 2013 - 10:43 Report Abuse
 காளை போப்பா போயி பாக்யராஜை பாருப்பா
Rate this:
குஞ்சிதபாதம் - Guntoor City,கேபோன்
07 ஜன, 2013 - 21:12 Report Abuse
 குஞ்சிதபாதம் ஏலேய் கொய்யா இத்தனை நாலு அவனிடம் சொல்லிவிட்டா படம் எடுத்தான் ஆட்டிய போடுறதே இவனுவளுக்கு வேலை
Rate this:
R பிரபு - Eechangudi,இந்தியா
07 ஜன, 2013 - 17:39 Report Abuse
 R பிரபு சார் நீங்க தற்கொலை எல்லாம் பண்ணவேண்டாம் இந்த படத்த முதல்நாளே போய் பார் கண்டிப்பா நீ செத்துருவ.......பவர் ஸ்டாரோட பவர் அப்படி..........
Rate this:
vishnu - colombo  ( Posted via: Dinamalar Android App )
07 ஜன, 2013 - 08:57 Report Abuse
vishnu இப்படி எல்லாம் புகாரா சந்தாநத்தி்ற்கு டமாராஃஃஃஃஃ
Rate this:
meenakshisundaram - chennai,இந்தியா
07 ஜன, 2013 - 05:08 Report Abuse
 meenakshisundaram சந்தானம் உண்மையிலயே பெரிய ஆள் ஆகிவிட்டார்
Rate this:
மேலும் 5 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement
இதையும் பாருங்க !

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in