விஜயகாந்த் வழியில் பயணிக்கும் சண்முக பாண்டியன் | அஞ்சான் படத்தை ரீ-எடிட் செய்து மீண்டும் ரிலீஸ் செய்யும் லிங்குசாமி | 45வது படத்தில் கடவுள் வேடத்தில் நடிக்கும் சூர்யா | பிளாஷ்பேக்: சொப்பன சுந்தரி யார் தெரியுமா? | ஜூலை 18ல் ரீ ரிலீஸ் ஆகும் நாகசைதன்யா, சமந்தா படம் | பிளாஷ்பேக்: பாண்டியராஜனுக்காக ஆஸ்பத்திரி வாசலில் படுத்துக் கிடந்த கொல்லங்குடி கருப்பாயி | மகளின் விழாவில் குடும்பத்துடன் நடனமாடிய ஏ.ஆர்.முருகதாஸ் | நான் இன்னமும் என்னை ஒரு நடிகராகவே கருதுகிறேன் : அமீர்கான் | வளர்ந்து வரும் நடிகர் சங்கக் கட்டுமானம்: வீடியோ வெளியீடு | 'காந்தாரா' ஷூட்டிங்கில் மீண்டும் விபத்து |
விஜய் தற்போது வம்சி டைரக்ஷனில் நடிப்பதன் மூலம் முதன்முறையாக தெலுங்கு திரையுலகில் அடியெடுத்து வைத்துள்ளார். இந்தப் படத்தை பிரபல தயாரிப்பாளர் தில் ராஜு தயாரித்து வருகிறார். இந்த படத்தின் கதாநாயகி யார் என இன்னும் அறிவிக்கப்படவில்லை. அதேசமயம் இந்த படம் விஜய்யின் முந்தைய படங்களிலிருந்து மாறுபட்டு, குடும்பம், பாசம், காதல், ஆக்ஷன் என எல்லாம் கலந்து உருவாக இருக்கிறது. குறிப்பாக காதலுக்கும் இந்த படம் முக்கியத்துவம் தந்து உருவாக இருக்கிறது.
அதனால் இந்தப்படத்தின் கதாநாயகி குறித்த அறிவிப்பை வரும் பிப்ரவரி 14ஆம் தேதி காதலர் தினத்தன்று அறிவிக்க இருக்கிறார்கள் என தகவல் தற்போது வெளியாகியுள்ளது. இந்த படத்தில் பாலிவுட் நடிகை ஒருவர் கதாநாயகியாக நடிப்பார் என சொல்லப்பட்டு வந்தாலும் இப்போதைய லிஸ்ட்டில் ராஷ்மிகா, கியாரா அத்வானி, ராஷி கண்ணா ஆகியோரின் பெயர்கள் முன்னணியில் இருப்பதாக சொல்லப்படுகிறது.