திறமையை மட்டும் பாருங்க : மாளவிகா மோகனன் கோபம் | 'முத்து என்கிற காட்டான்' : விஜய் சேதுபதி, மணிகண்டன் வெப்தொடரின் தலைப்பு | மாவீரன் இரண்டாம் பாகத்தில் நடிக்க விரும்பும் சிவகார்த்திகேயன் | தாய்லாந்தில் ரஜினி செய்த செயல் : ஐதராபாத்தில் வியந்து பேசிய நாகர்ஜூனா | கணவர் உடனான போட்டோக்கள் நீக்கம் : விவாகரத்து முடிவில் ஹன்சிகா? | பிரபாஸின் ‛தி ராஜா சாப்' மீண்டும் தள்ளிப் போகிறதா? | மலையாள இயக்குனர் படத்தில் நடிக்கப்போகும் சல்மான்கான் | மணிரத்னம் இயக்கத்தில் துருவ் விக்ரம், ருக்மணி வசந்த் | சினிமாவில் தொடர் தோல்வியில் சிரஞ்சீவி குடும்பம் | 'மழை பிடிக்காத மனிதன்' : மீண்டும் புகார் சொல்லும் விஜய் மில்டன் |
விஜய் தற்போது வம்சி டைரக்ஷனில் நடிப்பதன் மூலம் முதன்முறையாக தெலுங்கு திரையுலகில் அடியெடுத்து வைத்துள்ளார். இந்தப் படத்தை பிரபல தயாரிப்பாளர் தில் ராஜு தயாரித்து வருகிறார். இந்த படத்தின் கதாநாயகி யார் என இன்னும் அறிவிக்கப்படவில்லை. அதேசமயம் இந்த படம் விஜய்யின் முந்தைய படங்களிலிருந்து மாறுபட்டு, குடும்பம், பாசம், காதல், ஆக்ஷன் என எல்லாம் கலந்து உருவாக இருக்கிறது. குறிப்பாக காதலுக்கும் இந்த படம் முக்கியத்துவம் தந்து உருவாக இருக்கிறது.
அதனால் இந்தப்படத்தின் கதாநாயகி குறித்த அறிவிப்பை வரும் பிப்ரவரி 14ஆம் தேதி காதலர் தினத்தன்று அறிவிக்க இருக்கிறார்கள் என தகவல் தற்போது வெளியாகியுள்ளது. இந்த படத்தில் பாலிவுட் நடிகை ஒருவர் கதாநாயகியாக நடிப்பார் என சொல்லப்பட்டு வந்தாலும் இப்போதைய லிஸ்ட்டில் ராஷ்மிகா, கியாரா அத்வானி, ராஷி கண்ணா ஆகியோரின் பெயர்கள் முன்னணியில் இருப்பதாக சொல்லப்படுகிறது.