தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
விக்ரம் பிரபு நடித்துள்ள ‛டாணாக்காரன்' படம் விரைவில் ரிலீஸாக உள்ளது. இதையடுத்து ‛டைகர்' என்ற புதிய படத்தில் நாயகனாக நடிக்கிறார். கார்த்திக் என்பவர் இயக்க, இயக்குனர் முத்தையா திரைக்கதை, வசனம் எழுதுகிறார். நாயகியாக ஸ்ரீதிவ்யா நடிக்க, முக்கிய வேடத்தில் பி.வாசுவின் மகன் ஷக்தி நடிக்கிறார். இதன் படப்பிடிப்பு பூஜையுடன் இன்று(பிப்., 1) துவங்கியது. சாம்.சிஎஸ் இசையமைக்கிறார்.
இயக்குனர் கார்த்தி படம் குறித்து கூறுகையில், ‛‛டைகர் படம் ஆரம்பம் முதல் இறுதி வரை ரசிகர்களை இருக்கையின் நுனியில் அமரவைக்கும், பரபர த்ரில்லராக இருக்கும். ஒரு திரைக்கதை எழுத்தாளராக இந்த திரைப்படத்தில் இயக்குனர் முத்தையா பங்களிப்பது உண்மையில் உணர்வுப்பூர்வமாக எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை தந்துள்ளது. இது நிச்சயமாக பார்வையாளர்களை ஈர்க்கும், பரபர திரில்லராக, ஒரு நல்ல திரையரங்கு அனுபவத்தை தரும் படமாக இருக்கும்'' என்றார்.