மூணு குழந்தைகள் பெத்துக்கணும்... ஜான்வி கூறும் காரணம் | இரண்டாவது வாய்ப்பில் வெற்றி பெறுவாரா ருக்மிணி வசந்த்? | ‛கட்டா குஸ்தி 2' படம் துவங்கியது | சுதீப்பின் அடுத்த படத் தலைப்பு 'மார்க்' | தெலுங்கில் 100 கோடி வியாபாரத்தில் 'காந்தாரா சாப்டர் 1' | ரசிகர்களின் எதிர்பார்ப்புக்காக மட்டுமே படம் எடுக்க மாட்டேன் : லோகேஷ் கனகராஜ் | நல்ல கதாபாத்திரம் கிடைப்பதுதான் ஒரு நடிகைக்கு அங்கீகாரம்: மிர்னா மேனன் | பிளாஷ்பேக்: ரஜினி படத்தை தயாரித்து, இயக்கிய கன்னட நடிகர் | பிளாஷ்பேக்: ஹாலிவுட் ரீமேக்கில் நடிக்க மறுத்த பானுமதி | நடப்பு தயாரிப்பாளர் சங்க தேர்தல் : அனைத்து நிர்வாகிகளும் போட்டியின்றி தேர்வு |
விஜய் டிவியில் காபி வித் டிடி, ஜோடி நம்பர் -1 உள்ளிட்ட பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியவர் திவ்யதர்சினி. நள தமயந்தி, பவர் பாண்டி உட்பட பல படங்களில் நடித்திருக்கும் பிரியதர்ஷினி, தற்போது ஜோஸ்வா என்ற படத்திலும் நடித்து வருகிறார். இந்த படத்தில் அவர் ஒரு போலீஸ் வேடத்தில் நடிக்கிறார். இப்படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியானது.
இந்த நிலையில் திவ்யதர்ஷினி அளித்துள்ள ஒரு பேட்டியில், தான் நடிக்கும் கதாபாத்திரங்கள் மூலம் சமூகத்திற்கு ஏதேனும் நல்ல மெசேஜ்களை சொல்ல ஆசைப்படுவதாக கூறுகிறார். அதோடு தனுஷ் இயக்கிய பவர் பாண்டி படத்தில் நான் நடித்த வேடத்தில் பெண்களுக்கு ஒரு மெசேஜ் சொல்ல வேண்டும்.
அதை உங்களைப் போன்ற அனைவருக்கும் பரிச்சயமான பிரபலத்தை வைத்து சொன்னால் பெரிய அளவில் மக்களைப் போய்ச் சேரும் என்று சொல்லியே நடிக்க வைத்தார் தனுஷ். அந்தப் படத்தில் ஒரே ஒரு காட்சியில் தான் நடித்தேன். அது என்னை பெரிய அளவில் மக்கள் மத்தியில் கொண்டு சேர்த்தது. அதனால் அது போன்று வித்தியாசமான கேரக்டர்களில் நடிப்பதில் அதிக ஆர்வமாக இருக்கிறேன் என்று தெரிவித்துள்ளார் டிடி.