ஹரி ஹர வீரமல்லுவுக்காக 5 ஆண்டுகள் வேறு படங்களில் நடிக்காத நிதி அகர்வால் | பாலிவுட்டில் தடம் பதிப்பாரா ஜூனியர் என்டிஆர் | மோசடி வழக்கை சட்டப்படி சந்திப்பேன் : சாம் சி.எஸ் | பூமிகா ஆசை நிறைவேறுமா? | ஹீரோ இல்லாமல் நடந்த 'ஹரிஹர வீரமல்லு' பட விழா | ஜெயிலர் 2வில் மோகன்லால் இருக்கிறாரா? | விஜய் தரப்பின் பிரஷரால் வேகம் எடுக்கும் 'ஜனநாயகன்' | எனக்குள் அந்த தீ எரியும் வரை சினிமாவில் நடித்துக்கொண்டே இருப்பேன்! - கமல்ஹாசன் சொன்ன பதில் | தயாரிப்பாளர் ராஜேஷ் நடிக்கும் படத்தின் டைட்டில் 'அங்கீகாரம்'! பர்ஸ்ட் லுக் வெளியானது!! | 50வது படத்தில் வித்தியாசமான திருநங்கை வேடம்! - சிம்பு வெளியிட்ட தகவல் |
விஜய் டிவியில் காபி வித் டிடி, ஜோடி நம்பர் -1 உள்ளிட்ட பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியவர் திவ்யதர்சினி. நள தமயந்தி, பவர் பாண்டி உட்பட பல படங்களில் நடித்திருக்கும் பிரியதர்ஷினி, தற்போது ஜோஸ்வா என்ற படத்திலும் நடித்து வருகிறார். இந்த படத்தில் அவர் ஒரு போலீஸ் வேடத்தில் நடிக்கிறார். இப்படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியானது.
இந்த நிலையில் திவ்யதர்ஷினி அளித்துள்ள ஒரு பேட்டியில், தான் நடிக்கும் கதாபாத்திரங்கள் மூலம் சமூகத்திற்கு ஏதேனும் நல்ல மெசேஜ்களை சொல்ல ஆசைப்படுவதாக கூறுகிறார். அதோடு தனுஷ் இயக்கிய பவர் பாண்டி படத்தில் நான் நடித்த வேடத்தில் பெண்களுக்கு ஒரு மெசேஜ் சொல்ல வேண்டும்.
அதை உங்களைப் போன்ற அனைவருக்கும் பரிச்சயமான பிரபலத்தை வைத்து சொன்னால் பெரிய அளவில் மக்களைப் போய்ச் சேரும் என்று சொல்லியே நடிக்க வைத்தார் தனுஷ். அந்தப் படத்தில் ஒரே ஒரு காட்சியில் தான் நடித்தேன். அது என்னை பெரிய அளவில் மக்கள் மத்தியில் கொண்டு சேர்த்தது. அதனால் அது போன்று வித்தியாசமான கேரக்டர்களில் நடிப்பதில் அதிக ஆர்வமாக இருக்கிறேன் என்று தெரிவித்துள்ளார் டிடி.