நாகார்ஜுனா 100வது படத்தில் இணைந்த நடிகை சுஷ்மிதா பட்! | ‛வா வாத்தியார்' டைட்டிலின் பின்னணி ; ஆனந்தராஜ் சொன்ன தகவல் | தனுஷ் பட ஒளிப்பதிவாளருக்கு கிடைத்த மரியாதை | கவுதம் ராம் கார்த்திக்கின் ‛ரூட்' படத்தின் முழு படப்பிடிப்பும் நிறைவு பெற்றது! | சத்ய சாய் பாபா படத்தை இயக்கும் சுரேஷ் கிருஷ்ணா! | 'பெத்தி' படத்திலிருந்து ஜான்வி கபூர் முதல் பார்வை வெளியானது! | ‛மேயாத மான்' ரத்னகுமார் படத்தை தயாரிக்கும் இயக்குனர்கள்! | வாரிசு பட இயக்குனரின் அடுத்த படத்தில் நடந்த ட்விஸ்ட்! | கமல் பிறந்தநாளில் ரஜினி ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ்! | டப்பிங்கில் இவ்வளவு விஷயங்களா? விளக்குகிறார் ஷ்யாம் குமார் |

மலையாள நடிகர் திலீப்புக்கு இது ரொம்பவே சோதனையான காலகட்டம் என்றே சொல்லலாம்.. நான்கு வருடங்களுக்கு முன் நடிகை கடத்தல் வழக்கில் சிக்கி, சிறை சென்று, ஜாமீனில் வெளியே வந்தார் திலீப். முன்பை விட அதிகளவு படங்களிலும் நடித்து வருகிறார். அதற்கேற்ற மாதிரி கடந்த மூன்று வருடங்களாக அந்த வழக்கும் ஆமை வேகத்தில் தான் நகர்ந்து வந்தது.
இந்த நிலையில் சமீபத்தில் நடிகர் திலீப்பின் நண்பரும் இயக்குனருமான பாலச்சந்திர குமார் என்பவரே திடீரென அவருக்கு எதிராக திரும்பி, திலீப் ஜாமீனில் வெளிவந்தபின் நடிகை கடத்தல் சம்பந்தமான வீடியோ கிளிப்புகளை பார்த்தார் என சில பரபரப்பான தகவல்களை நீதிமன்றத்தில் வாக்குமூலமாக பதிவு செய்தார். .
இதனை தொடர்ந்து இந்த தகவல்களை காரணம் காட்டி இந்த வழக்கில் போலீஸாரால் தான் மீண்டும் கைது செய்யப்படலாம் என்று எண்ணிய நடிகர் திலீப் கடந்த சில நாட்களுக்கு முன்பாகவே தனக்கு முன்ஜாமீன் கேட்டு கேரள உயர் நீதிமன்றத்தில் விண்ணப்பித்திருந்தார். ஏற்கனவே மூன்று முறை இந்த முன் ஜாமீன் மனு மீதான விசாரணையை தள்ளி வைத்த நீதிமன்றம் நேற்று அந்த மனுவை கையில் எடுத்தது.. ஆனால் இந்தமுறையும் இந்த மனுவின் மீதான விசாரணையை ஒருநாள் தள்ளி வைப்பதாக நீதிமன்றம் அறிவித்தது.
காரணம் இந்த வழக்கில் பல விஷயங்களை இன்னும் விரிவாக விவாதிக்க வேண்டும் என்பதால், சனிக்கிழமை (இன்று) நீதிமன்றத்திற்கு விடுமுறை என்றாலும் கூட இந்த வழக்கை விசாரிப்பதற்காக நீதிமன்றம் செயல்படும் என நீதிபதி கூறியுள்ளார். அதனால் இன்று மாலைக்குள் இந்த வழக்கியல் முக்கிய உத்தரவு ஏதேனும் வரும் எதிர்பார்க்கலாம்..