மே 10 ரிலீஸில் இணைந்த ரசவாதி | நடிகர் சங்கத்திற்கு நெப்போலியன் ஒரு கோடி நிதி | ரெட்ட தல படப்பிடிப்பு துவங்கியது | எவரெஸ்ட் சிகரத்திற்கு டிரக்கிங் சென்ற ஜோதிகா | போட்டோ சூட் நடத்திய நிறைமாத கர்ப்பிணி அமலா பால் | அரிவாளுடன் விக்ரம் நிற்கும் வீர தீர சூரன் போஸ்டர் : போலீசுக்கு பறந்த புகார் | குழந்தை பிறப்பை தள்ளி போடாதீர்கள் - சீரியல் நடிகை ஜூலி அட்வைஸ் | 100 நாட்களைக் கடந்த ‛வேட்டையன்' படப்பிடிப்பு | வில்லன் நடிகருடன் பிரேக்கப்பா? - புகைப்படம் மூலம் முற்றுப்புள்ளி வைத்த காதலி | இறுதிக்கட்ட படப்பிடிப்பில் திரிஷாவின் ஐடென்டிட்டி |
நாகப்பட்டினத்தை சேர்ந்த பள்ளி மாணவி தேவசங்கரி. இவர், பிளஸ் 2 முடித்ததும் நர்சிங் படிக்க விரும்பினார். ஆனால் குடும்ப வறுமை காரணமாக தொடர்ந்து அவரால் படிக்க முடியவில்லை. இதையடுத்து அவரது தந்தை நடத்தி வந்த சைக்கிள் பஞ்சர் கடையில் வேலை பார்த்து வந்தார்.
இவரை பற்றிய வீடியோ சமூக வலைத்தளத்தில் பரவியது. இதை அறிந்த சிவகார்த்திகேயன், தேவசங்கரியுடன் தொலைபேசியில் பேசினார். அப்போது அவர் தான் நர்சிங் படித்து நோயாளிகளுக்கு சேவை செய்ய விரும்புவதாகவும், அதுவே தன் கனவு என்றும் கூறியிருக்கிறார்.
இதை தொடர்ந்து நாகப்பட்டினத்தில் உள்ள ஒரு நர்சிங் பயிற்சி கல்லூரியில் தேவசங்கரி சேர்ந்து படிக்க ஏற்பாடு செய்துள்ளார் சிவகார்த்திகேயன். அதோடு தேவசங்கரியின் குடும்பத்தினருக்கு பொங்கலுக்கு புத்தாடையும் எடுத்து கொடுத்துள்ளார் சிவகார்த்திகேயன்.