வாழைப்பழக் கடை நடத்தியவரின் மகன் இன்று பிரபாஸ் பட இயக்குனர் | பவன் கல்யாண் நடிக்கும் படத்தை இயக்க தனுஷ் விருப்பம் | பிளாஷ்பேக்: சிவாஜியின் வசனம், டி எம் எஸ் பேசிப் பாடி, சிறப்பித்த திரைப்படப் பாடல் | குபேரா : தமிழ் டிரைலரை ஓவர்டேக் செய்யும் தெலுங்கு டிரைலர் | லோகேஷ் கனகராஜ் இயக்கும் ‛கைதி -2' படத்தில் நடிக்கவில்லை! -அனுஷ்கா மறுப்பு | திரில்லர் கதையை படமாக்கும் பிரேம்குமார்! பிரதீப் ரங்கநாதன் நடிக்கிறார்!! | கமலின் 237வது படம் டிராப் ஆகிவிட்டதா? | சண்முக பாண்டியன் நடித்துள்ள ‛படை தலைவன்' படத்தின் இரண்டு நாள் வசூல் எவ்வளவு? | ஸ்ரீ லீலாவுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து சுதா கொங்கரா வெளியிட்ட வீடியோ! | எம்.பி.,யான கமல்ஹாசன்; சினிமா வளர்ச்சிக்காக குரல் கொடுப்பாரா? |
கொரோனா 3வது அலையில் பல சினிமா பிரபலங்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் நடிகை கீர்த்தி சுரேஷும் ஒருவர். ஒரு வாரத்திற்கு முன்பு, தனக்கு கொரானோ பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும், லேசான அறிகுறி என்பதால் வீட்டிலேயே ஓய்வெடுப்பதாகவும் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் தற்போது, “நெகட்டிவ்' என்பது இந்தக் காலத்தில் பாசிட்டிவ்வான விஷயமாகிவிட்டது. உங்கள் அனைவரின் அன்புக்கும், பிரார்த்தனைக்கும் நன்றி. நீங்கள் அனைவரும், பொங்கல், சங்கராந்தியை சிறப்பாகக் கொண்டாடி இருப்பீர்கள் என நினைக்கிறேன்,” என்று குறிப்பிட்டு சில செல்பி புகைப்படங்களையும் பதிவிட்டுள்ளார்.
ஏற்கெனவே ஒல்லியாக மாறிய கீர்த்தி ஒரு வார கொரானோ பாதிப்பில் இன்னும் ஒல்லியாக மாறியிருக்கிறார். கொரானோவிலிருந்து மீண்டு வந்துள்ள கீர்த்திக்கு அவரது ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.