ஆகஸ்ட் 12ல் லத்தி வெளியீடு | சிவாஜி குடும்பத்தில் இருந்து அறிமுகமாகும் மற்றொரு நடிகர் | 20 ஆண்டுகளுக்கு பிறகு அஜித்துடன் இணையும் மகாநதி ஷங்கர் | பத்து தல படத்திற்கு தயாரான சிம்பு | சேரன் இயக்கத்தில் ஆரி, திவ்ய பாரதி நடிக்கும் புதிய வெப்சீரிஸ் | விஜயின் 67வது படம்: உறுதிப்படுத்திய லோகேஷ் கனகராஜ் | விடுதலை படத்திற்காக அமைக்கப்பட்ட ஒரு பெரிய கிராமப்புற செட்! | வெளிநாட்டில் பட்டம் பெற்ற சரத்குமார் - ராதிகாவின் மகன் | சிறு பட்ஜெட் படங்களை வெளியிட உதயநிதிக்கு சீனு ராமசாமி கோரிக்கை! | நடிகையாக களமிறங்கும் பிரபல கிரிக்கெட் வீரரின் சகோதரி! |
இளையராஜாவின் திரையிசை வரலாற்றில் இன்னொரு சாதனை நிகழ இருக்கிறது. உலகத்திலேயே எடை குறைவான சாட்டிலைட் தயாரிக்கும் தமிழகத்தை சேர்ந்த ஒரு மாணவர்கள் குழு இந்த ஆண்டு இன்னும் அதிக எடையை குறைத்து ஒரு புதிய சாட்டிலைட்டை வடிவமைத்திருக்கிறது. இந்தியாவின் 75வது சுதந்திர தினத்தை முன்னிட்டு இஸ்ரோ உதவியுடன் இளையராஜா இசையமைத்துள்ள பாடல் இடம்பெற்றுள்ள சாட்டிலைட்டை விண்வெளிக்கு அனுப்ப இந்த மாணவர்கள் குழு முடிவு செய்துள்ளது.
இது தொடர்பாக இளையராஜாவுடன் நீண்ட காலமாக பயணித்து வரும் ஸ்ரீராம் நமது நாளிதழக்கு அளித்த பேட்டியின்போது கூறுகையில், ‛இந்தியாவின் 75வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, புதுமையான முயற்சியாக மாணவர்கள் குழு வடிவமைத்துள்ள சாட்டிலைட்டில் இளையராஜாவின் பாடலை ஒலிக்க செய்ய உள்ளனர். இதற்காக பிரதமர் மோடியுடன் கலந்தாலோசிக்கப்பட்டது. கடந்த 75 ஆண்டுகள் நிகழ்ந்த இந்தியாவின் புதுமைகளையும், இனிவரும் காலங்களில் இந்த பாரதம் நம்பர் ஒன் தேசமாக இருக்கும் என்பதையும் உள்ளடக்கிய பாடலை இளையராஜா இசையமைத்துள்ளார். சுவானந்த் கிர்கிரே எழுதிய ஹிந்தி பாடலாக இது உருவாகியுள்ளது. இதனை தமிழிலும் இளையராஜா இசையமைக்க விரும்புகிறார்,' என்றார்.
இதனையடுத்து இளையராஜாவின் பாடல் விரைவில் விண்வெளியில் ஒலிக்க போகிறது. இதற்காக அவர் பணம் எதுவும் பெற்றுக்கொள்ளாமல், நாட்டிற்காக தனது பங்களிப்பாக இருக்கட்டும் என இசையமைத்து கொடுத்துள்ளார்.