கலைமாமணி விருது பெற்றனர் சாய் பல்லவி, அனிருத், விக்ரம் பிரபு | மீண்டும் தனுஷ் படத்திற்கு இசையமைக்கும் அனிருத் | டியூட் சமூகப் பிரச்னையை வெளிச்சம் போட்டு காட்டும் : சொல்கிறார் பிரதீப் ரங்கநாதன் | கமலுக்கு அடுத்து அழகான ஹீரோ ஹரிஷ் கல்யாண் தான் : சொல்கிறார் இயக்குனர் மிஷ்கின் | ரஜினியின் வேட்டையன் வெளியாகி ஓராண்டு நிறைவு : இயக்குனர் ஞானவேல் வெளியிட்ட பதிவு | கணவரின் ஆயுள் நீடிக்க காஜல் அகர்வால் கர்வா சவுத் பூஜை | பிளாஷ்பேக்: ரஜினி படத்தில் நடிக்க மறுத்த சிவாஜி | பிளாஷ்பேக் : 36 ஆண்டுகள் இருட்டு அறையில் தனிமையில் வாழ்ந்த நடிகை | முதல் படத்திலேயே ஆக்ஷன் ஹீரோயின் ஆன சுஷ்மிதா சுரேஷ் | 'பேட்டில்' படத்தில் ராப் பாடகரின் வாழ்க்கை |
இந்தியத் திரையுலகத்தின் தனிப் பெரும் இசையமைப்பாளர் இளையராஜா. இப்போதும் தமிழ் மட்டுமல்லாது மற்ற மொழிப் படங்களுக்கும் இசையமைத்து வருகிறார். இந்த 2025ம் ஆண்டில் இளையராஜா இசையமைத்து தமிழில் “தினசரி, ஸ்கூல், பேரன்பும் பெருங்கோபமும், படைத் தலைவன், திருக்குறள்” ஆகிய படங்களும், தெலுங்கில், 'சஷ்டி பூர்த்தி' படமும் வெளிவந்துள்ளன.
நேற்று இளையராஜா இசையமைத்து வரும் இரண்டு படங்களின் இசை வெளியீடு காலை, மாலை என இரண்டு வேளைகளில் நடந்தது. காலையில், அஜயன் பாலா இயக்கத்தில், ஸ்ரீராம் கார்த்திக், க்ரிஷா க்ரூப் மற்றும் பலர் நடிக்கும் 'மைலாஞ்சி' படத்தின் இசை வெளியீடும், மாலையில், அரவிந்தராஜ் இயக்கத்தில் ஜேஎம் பஷிர் நடிக்கும் 'தேசிய தலைவர்' படத்தின் இசை வெளியீடும் சென்னையில் நடைபெற்றது.
இரண்டு நிகழ்வுகளிலும் இளையராஜா கலந்து கொள்ளவில்லை என்றாலும், 'தேசிய திலைவர்' படத்தின் இசை வெளியீட்டை அதற்கு முன்னதாக தனிப்பட்ட முறையில் நடத்தி இருக்கிறார்கள். இளையராஜா இசையை வெளியிட தயாரிப்பாளர் தாணு, நடிகர் பிரபு அதைப் பெற்றுக் கொண்டுள்ளார்கள்.
இரண்டு நிகழ்வுகளிலும் கலந்து கொண்டவர்கள் இளையராஜாவின் இசையைப் பற்றிப் பாராட்டிப் பேசினார்கள்.