நீண்ட இடைவெளிக்குப் பின் டிவி பக்கம் வந்த ரோஜா | சென்னையில் இன்று புதிதாகத் திறக்கப்பட்ட 2 தியேட்டர்கள் | தமிழ் சினிமாவின் 3 மாதங்கள்…. வசூல் 300 கோடி மட்டுமே…. | இயக்குனர் மணிகண்டன் ஏன் பேசவில்லை | கர படத்தை தமிழகத்தில் வெளியிடும் ரெட் ஜெயன்ட் நிறுவனம் | பாய்ஸ் படத்தை ரீ ரிலீஸ் செய்ய தயாரிப்பாளர் திட்டம் | ரசிங்க, விமர்சனம் செய்யாதீங்க : திஷா பதானி | ‛சிறை' அனிஷ்மாவின் மூன்றாவது தமிழ் படம் | எனக்கு கிடைத்த இரண்டு சகோதரர்கள் : பவன் கல்யாண் மனைவி நெகிழ்ச்சி | ரசிகர்களை உற்சாகப்படுத்த தியேட்டர்களில் வெளியாகும் திரிஷ்யம் 2 |

இந்தியத் திரையுலகத்தின் தனிப் பெரும் இசையமைப்பாளர் இளையராஜா. இப்போதும் தமிழ் மட்டுமல்லாது மற்ற மொழிப் படங்களுக்கும் இசையமைத்து வருகிறார். இந்த 2025ம் ஆண்டில் இளையராஜா இசையமைத்து தமிழில் “தினசரி, ஸ்கூல், பேரன்பும் பெருங்கோபமும், படைத் தலைவன், திருக்குறள்” ஆகிய படங்களும், தெலுங்கில், 'சஷ்டி பூர்த்தி' படமும் வெளிவந்துள்ளன.
நேற்று இளையராஜா இசையமைத்து வரும் இரண்டு படங்களின் இசை வெளியீடு காலை, மாலை என இரண்டு வேளைகளில் நடந்தது. காலையில், அஜயன் பாலா இயக்கத்தில், ஸ்ரீராம் கார்த்திக், க்ரிஷா க்ரூப் மற்றும் பலர் நடிக்கும் 'மைலாஞ்சி' படத்தின் இசை வெளியீடும், மாலையில், அரவிந்தராஜ் இயக்கத்தில் ஜேஎம் பஷிர் நடிக்கும் 'தேசிய தலைவர்' படத்தின் இசை வெளியீடும் சென்னையில் நடைபெற்றது.
இரண்டு நிகழ்வுகளிலும் இளையராஜா கலந்து கொள்ளவில்லை என்றாலும், 'தேசிய திலைவர்' படத்தின் இசை வெளியீட்டை அதற்கு முன்னதாக தனிப்பட்ட முறையில் நடத்தி இருக்கிறார்கள். இளையராஜா இசையை வெளியிட தயாரிப்பாளர் தாணு, நடிகர் பிரபு அதைப் பெற்றுக் கொண்டுள்ளார்கள்.
இரண்டு நிகழ்வுகளிலும் கலந்து கொண்டவர்கள் இளையராஜாவின் இசையைப் பற்றிப் பாராட்டிப் பேசினார்கள்.