என்னை ஏன் டார்கெட் செய்கிறார்கள் : கயாடு லோஹர் வேதனை | பெரிய சம்பளத்தை மட்டுமே எதிர்பார்த்து நான் நடிப்பதில்லை : தீபிகா படுகோனே விளக்கம் | ரன்வீர், சாரா நடித்துள்ள துரந்தர் பட டிரைலர் வெளியானது | ரஜினி படத்திலிருந்து விலகியதால் மீண்டும் கார்த்தியுடன் இணையும் சுந்தர்.சி | பாலகிருஷ்ணா 111வது படத்தில் ராணி ஆக நயன்தாரா | எம்புரான் விமர்சனம் : பிரித்விராஜ் கருத்து | மீண்டும் காமெடி ஹீரோவான சதீஷ் | ஒரே படத்தின் மூலம் தமிழுக்கு வரும் தெலுங்கு, மலையாள ஹீரோயின்கள் | டேனியல் பாலாஜியின் கடைசி படம்: 28ம் தேதி வெளியாகிறது | பிளாஷ்பேக்: சோகத்தில் வென்ற ரஜினிகாந்தும், தோற்ற விஜயகாந்தும் |

இந்தியத் திரையுலகத்தின் தனிப் பெரும் இசையமைப்பாளர் இளையராஜா. இப்போதும் தமிழ் மட்டுமல்லாது மற்ற மொழிப் படங்களுக்கும் இசையமைத்து வருகிறார். இந்த 2025ம் ஆண்டில் இளையராஜா இசையமைத்து தமிழில் “தினசரி, ஸ்கூல், பேரன்பும் பெருங்கோபமும், படைத் தலைவன், திருக்குறள்” ஆகிய படங்களும், தெலுங்கில், 'சஷ்டி பூர்த்தி' படமும் வெளிவந்துள்ளன.
நேற்று இளையராஜா இசையமைத்து வரும் இரண்டு படங்களின் இசை வெளியீடு காலை, மாலை என இரண்டு வேளைகளில் நடந்தது. காலையில், அஜயன் பாலா இயக்கத்தில், ஸ்ரீராம் கார்த்திக், க்ரிஷா க்ரூப் மற்றும் பலர் நடிக்கும் 'மைலாஞ்சி' படத்தின் இசை வெளியீடும், மாலையில், அரவிந்தராஜ் இயக்கத்தில் ஜேஎம் பஷிர் நடிக்கும் 'தேசிய தலைவர்' படத்தின் இசை வெளியீடும் சென்னையில் நடைபெற்றது.
இரண்டு நிகழ்வுகளிலும் இளையராஜா கலந்து கொள்ளவில்லை என்றாலும், 'தேசிய திலைவர்' படத்தின் இசை வெளியீட்டை அதற்கு முன்னதாக தனிப்பட்ட முறையில் நடத்தி இருக்கிறார்கள். இளையராஜா இசையை வெளியிட தயாரிப்பாளர் தாணு, நடிகர் பிரபு அதைப் பெற்றுக் கொண்டுள்ளார்கள்.
இரண்டு நிகழ்வுகளிலும் கலந்து கொண்டவர்கள் இளையராஜாவின் இசையைப் பற்றிப் பாராட்டிப் பேசினார்கள்.