ஹரி ஹர வீரமல்லுவுக்காக 5 ஆண்டுகள் வேறு படங்களில் நடிக்காத நிதி அகர்வால் | பாலிவுட்டில் தடம் பதிப்பாரா ஜூனியர் என்டிஆர் | மோசடி வழக்கை சட்டப்படி சந்திப்பேன் : சாம் சி.எஸ் | பூமிகா ஆசை நிறைவேறுமா? | ஹீரோ இல்லாமல் நடந்த 'ஹரிஹர வீரமல்லு' பட விழா | ஜெயிலர் 2வில் மோகன்லால் இருக்கிறாரா? | விஜய் தரப்பின் பிரஷரால் வேகம் எடுக்கும் 'ஜனநாயகன்' | எனக்குள் அந்த தீ எரியும் வரை சினிமாவில் நடித்துக்கொண்டே இருப்பேன்! - கமல்ஹாசன் சொன்ன பதில் | தயாரிப்பாளர் ராஜேஷ் நடிக்கும் படத்தின் டைட்டில் 'அங்கீகாரம்'! பர்ஸ்ட் லுக் வெளியானது!! | 50வது படத்தில் வித்தியாசமான திருநங்கை வேடம்! - சிம்பு வெளியிட்ட தகவல் |
காத்து வாக்குல ரெண்டு காதல் படத்தையடுத்து கனெக்ட் மற்றும் காட்பாதர், கோல்ட், ஹிந்தியில் அட்லி இயக்கும் படம் என பிஸியாக நடித்து வருகிறார் நயன்தாரா. அதோடு விக்னேஷ் சிவன் உடன் இணைந்து ரவுடி பிக்சர்ஸ் சார்பில் படங்களை தயாரித்து வருகிறார். மேலும், சாய் வாலா என்கிற டீ நிறுவனத்தில் பங்குதாரராகவும் இருந்து வரும் நயன்தாரா, கடந்த மாதத்தில் தனது தோழியுடன் இணைந்து டி லிப் பாம் கம்பெனி என்கிற அழகுசாதன பொருள் தயாரிக்கும் நிறுவனத்தையும் தொடங்கி இருக்கிறார்.
இந்த நிலையில் தற்போது துபாயில் ரூபாய் 100 கோடி முதலீட்டில் எண்ணெய் பிசினஸ் செய்ய நயன்தாரா முடிவெடுத்திருப்பதாகவும் அதற்கான ஆலோசனை நடத்தவே கடந்த புத்தாண்டு தினத்தின் போதும் தனது காதலர் விக்னேஷ் சிவனுடன் அவர் துபாய் நாட்டுக்கு சென்றதாகவும் புதிய தகவல் ஒன்று வெளியாகி இருக்கிறது. ஆக, சினிமாவில் நடிகை, தயாரிப்பாளர் என்று செயல்பட்டு வரும் நயன்தாரா தற்போது பல பிசினஸ்களிலும் முதலீடு செய்ய தொடங்கி இருக்கிறார்.