அஸ்வத் மாரிமுத்துவிற்கு விண்ணப்பித்த 15 ஆயிரம் உதவி இயக்குனர்கள்! | கவுதம் ராம் கார்த்திக் 19வது படத்தின் படப்பிடிப்பு துவங்கியது! | ''இப்போ ரிஸ்க் எடுக்கலைனா.. எப்பவும் இல்ல'': சினிமா என்ட்ரி குறித்து மனம்திறந்த காவ்யா அறிவுமணி | த்ரிவிக்ரம் இயக்கத்தில் தனுஷ்? | குட் பேட் அக்லி - முன்பதிவு நிலவரம் என்ன? | அஜித், தனுஷ் கூட்டணி அடுத்த கட்டத்திற்கு நகர்கிறது! | 'ரெட்ட தல' படத்தின் புதிய அப்டேட்! | ராஜமவுலியுடன் இணையாதது ஏன்? சிரஞ்சீவி விளக்கம் | சென்னையை விட்டு சென்றது ஏன்? சசிகுமார் விளக்கம் | தமிழிலும் வெளியாகும் 'இத்திக்கர கொம்பன்' |
‛பாய்ஸ்' படத்தில் 5 நாயகர்களில் ஒருவராக அறிமுகமான தமன், பின்னர் இசையில் கவனத்தை செலுத்தினார். தற்போது தெலுங்கில் முன்னணி இசையமைப்பாளராக இருக்கும் இவர் தமிழ் படங்களுக்கும் அவ்வப்போது இசையமைத்து வருகிறார். இந்நிலையில் இந்தியா முழுக்க கொரோனா மீண்டும் வேகமாக பரவி வருகிறது. திரையுலகினர் பலரும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். தெலுங்கில் நடிகர் மகேஷ் பாபு தனக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக அறிவித்துள்ளார். இவரைத்தொடர்ந்து தமனும் கொரோனாவால் தான் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
தமன் கூறுகையில், ‛‛கொரோனா இரண்டு தடுப்பூசி செலுத்திய பின்னரும் எனக்கு கொரோனா பாசிட்டிவ் என வந்தது. லேசான அறிகுறி என்பதால் வீட்டிலேயே தனிமைப்படுத்தி உரிய பாதுகாப்பு நெறிமுறைகளுடன் எனது மருத்துவர்கள் ஆலோசனைப்படி சிகிச்சை பெற்று வருகிறேன். என்னுடன் தொடர்பில் இருந்தவர்களும் பரிசோதனை செய்து கொள்ளுங்கள். அனைவரும் பாதுகாப்பாக இருங்கள், தடுப்பூசி செலுத்தி கொள்ளுங்கள் என தெரிவித்துள்ளார்.
நேற்று முன்தினம் தான் சிவகார்த்திகேயனின் 20வது பட பணிகளை துவங்கி அது தொடர்பான நிகழ்வுகளை மகிழ்ச்சி உடன் பகிர்ந்து இருந்தார் தமன். இப்பட இசை பணியின்போது சிவகார்த்திகேயன், இயக்குனர் அனூதீப் உள்ளிட்டோரும் உடன் இருந்தனர். இதனால் இவர்களும் இப்போது கலக்கத்தில் உள்ளனர்.