லோகேஷ் கனகராஜ், வாமிகா கபி நடிக்கும் ‛டிசி' | உறவுகள் பொய் சொன்னால் என்னால் பொறுத்துக் கொள்ள முடியாது : தமன்னா | 15 வருடத்திற்கு பிறகு மலையாள படம் மூலம் ரீஎன்ட்ரி கொடுக்கும் மோகினி | மம்முட்டிக்காக கண்ணூர் கோவிலில் பொன்குடம் நேர்த்திக்கடன் செலுத்திய ரசிகர் | ரெட் லேபிள் படத்தின் முதல் பார்வையை வெளியிட்ட நடிகை சிம்ரன் | இப்ப ஹீரோ, அடுத்து இயக்கம் : புதுமாப்பிள்ளை அபிஷன் ஜீவிந்த் பேட்டி | இந்தப்போக்கு மோசமானது : நிவேதா பெத்துராஜ் | தன் இறப்புக்கு லீவு வாங்கிக் கொடுத்த அப்பா : மேடையில் கண் கலங்கிய ஆனந்தராஜ் | அல்லு அர்ஜுன் தம்பி அல்லு சிரிஷ் நிச்சயதார்த்தம் | இயக்குனர் வி.சேகர் மருத்துவமனையில் அட்மிட் : மகன் உருக்கமான வேண்டுகோள் |

‛பாய்ஸ்' படத்தில் 5 நாயகர்களில் ஒருவராக அறிமுகமான தமன், பின்னர் இசையில் கவனத்தை செலுத்தினார். தற்போது தெலுங்கில் முன்னணி இசையமைப்பாளராக இருக்கும் இவர் தமிழ் படங்களுக்கும் அவ்வப்போது இசையமைத்து வருகிறார். இந்நிலையில் இந்தியா முழுக்க கொரோனா மீண்டும் வேகமாக பரவி வருகிறது. திரையுலகினர் பலரும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். தெலுங்கில் நடிகர் மகேஷ் பாபு தனக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக அறிவித்துள்ளார். இவரைத்தொடர்ந்து தமனும் கொரோனாவால் தான் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
தமன் கூறுகையில், ‛‛கொரோனா இரண்டு தடுப்பூசி செலுத்திய பின்னரும் எனக்கு கொரோனா பாசிட்டிவ் என வந்தது. லேசான அறிகுறி என்பதால் வீட்டிலேயே தனிமைப்படுத்தி உரிய பாதுகாப்பு நெறிமுறைகளுடன் எனது மருத்துவர்கள் ஆலோசனைப்படி சிகிச்சை பெற்று வருகிறேன். என்னுடன் தொடர்பில் இருந்தவர்களும் பரிசோதனை செய்து கொள்ளுங்கள். அனைவரும் பாதுகாப்பாக இருங்கள், தடுப்பூசி செலுத்தி கொள்ளுங்கள் என தெரிவித்துள்ளார்.
நேற்று முன்தினம் தான் சிவகார்த்திகேயனின் 20வது பட பணிகளை துவங்கி அது தொடர்பான நிகழ்வுகளை மகிழ்ச்சி உடன் பகிர்ந்து இருந்தார் தமன். இப்பட இசை பணியின்போது சிவகார்த்திகேயன், இயக்குனர் அனூதீப் உள்ளிட்டோரும் உடன் இருந்தனர். இதனால் இவர்களும் இப்போது கலக்கத்தில் உள்ளனர்.