இந்த ஆண்டு 3வது யானை படம் | குறும்புக்கார குழந்தை : விநாயகனை நெகிழ வைத்த மம்முட்டி | ரிலீசுக்கு முன்பே 350 கோடி முன் வியாபாரத்தை முடித்த 'திரிஷ்யம் 3' | பாலிவுட் படப்பிடிப்பில் உட்காருவதற்கு நாற்காலி கூட கிடைக்காது; துல்கர் சல்மான் பகீர் தகவல் | 'திரிஷ்யம் 3' படப்பிடிப்பை நிறைவு செய்த மோகன்லால் | ரியோ என பெயரை மாற்றிய நடிகர் ரியோ ராஜ்! | 5 ஆண்டுகளாக கதை குறித்த ஆலோசனையில் ஈடுபட்டு வரும் கீர்த்தி சுரேஷ்! | மலேசியா முருகன் கோவிலில் சாமி தரிசனம் செய்த அஜித்குமார்! | தனுசை ஆச்சரியப்பட வைத்த இயக்குனர் விக்னேஷ் ராஜா! | 96 பட இயக்குனரிடம் கதை கேட்ட நானி |

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சர்வைவர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார் ஐஸ்வர்யா கிருஷ்ணன். இவர், பிரபலங்களின் பிட்னஸ் டிரெயினராகவும், மாடலாகவும் அதிகம் அறியப்படுகிறார். சர்வைவர் நிகழ்ச்சி சமீபத்தில் முடிவடைந்ததையடுத்து அதில் கலந்து கொண்ட பிரபலங்கள் மீடியா மற்றும் சோஷியல் மீடியாக்களின் மூலம் தங்களது அடுத்த பிளான் குறித்து பகிர்ந்து வருகின்றனர்.
இந்நிலையில், ஐஸ்வர்யா மீண்டும் ஒரு ரியாலிட்டி ஷோவில் கலந்து கொள்ளும் தகவல் வெளியாகியுள்ளது. ஐஸ்வர்யா ஜீ தமிழின் 'சூப்பர் குயின்' என்கிற புதிய ரியாலிட்டி நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொள்கிறார். அந்த நிகழ்ச்சியின் ஷூட்டிங் ஸ்பாட்டில் ஐஸ்வர்யா கலந்து கொண்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
ஆனால், இந்த நிகழ்ச்சி குறித்த மற்ற தகவல்கள் எதுவும் இதுவரை வெளியாகாத நிலையில், ஞாயிறு தோறும் ஒளிபரப்பாகும் என தெரிய வருகிறது.




