டிச., 27ல் மலேசியாவில் ‛ஜனநாயகன்' இசை வெளியீடு | டிசம்பர் 12ல் ரஜினி பிறந்தநாளில் ரீ ரிலீஸ் ஆகும் அண்ணாமலை | ராஜமவுலிக்கு ஆதரவாக குரல் கொடுத்த ராம் கோபால் வர்மா | பிரபல எழுத்தாளர் உடன் கைகோர்க்கும் சந்தானம் | அஞ்சான் படத்தின் நீளத்தை குறைத்த லிங்குசாமி | 26 வருடங்களுக்கு பிறகு ரீ ரிலீஸ் ஆகும் அமர்க்களம் | மீண்டும் கன்னட சினிமாவிற்கு திரும்பிய பிரியங்கா மோகன் | வரி ஏய்ப்பு : நாகார்ஜுனா, வெங்கடேஷ் குடும்ப ஸ்டுடியோக்களுக்கு நோட்டீஸ் | ஜனநாயகன் - தெலுங்கு வியாபாரம் முடிவு | தெலுங்கில் ரீரிலீசாகும் 'பையா' : மீண்டும் பார்க்க கார்த்தி ஆர்வம் |

சமீபத்தில் அல்லு அர்ஜுன், பஹத் பாசில் நடிப்பில் வெளியான புஷ்பா திரைப்படம் ரசிகர்களின் எதிர்பார்ப்பை ஓரளவுக்கு ஈடு கட்டியது. காட்சிகள் எல்லாமே ரியலிஸ்ட்டிக்காக இருக்க வேண்டும் என மெனக்கெட்டு படமாக்கி இருந்தார் இயக்குனர் சுகுமார். அதனால் தான் ராஷ்மிகா - அல்லு அர்ஜுன் சம்பந்தப்பட்ட காட்சி ஒன்றை கூட அவர் ரொம்பவே நெருக்கமாக படமாக்கி இருந்தார். ஆனால் அது ரசிகர்களின் கடுமையான விமர்சனத்துக்கு ஆளான நிலையில் படத்தில் இருந்து அந்த காட்சி நீக்கப்பட்டது.
இதை குறிப்பிட்டு சமீபத்தில் பேட்டியளித்த இயக்குனர் சுகுமார், “இதற்கே இப்படி என்றால், அல்லு அர்ஜுன்-பஹத் பாசில் நடித்த் க்ளைமாக்ஸ் காட்சியில் இருவரையும் கிட்டத்தட்ட நிர்வாணமாக நடிக்க வைத்து சண்டைக்காட்சிகளை படமாக்கினோம். ஆனால் தெலுங்கு ரசிகர்கள் மத்தியில் அது நிச்சயம் விமர்சனத்துக்கு ஆளாகும் என பலரும் கருதியதால், அதை படத்திலிருந்து தூக்கிவிட்டு, வேறு மாதிரியாக அந்த சண்டைக்காட்சியை படமாக்கினோம் என்று கூறியுள்ளார்.




