மதராஸி ‛கம்பேக்' கொடுக்கும் படமாக இருக்கும் என்கிறார் ஏ.ஆர்.முருகதாஸ் | 'ஏஸ்' தோல்வியிலிருந்து ஏறி வந்த விஜய் சேதுபதி | ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்த மாதம்பட்டி ரங்கராஜ் இரண்டாவது திருமணம் | வாடகை வீட்டில் வசிப்பது ஏன் ? பாலிவுட் நடிகர் அனுபம் கெர் ஆச்சரிய விளக்கம் | அஜித்தை வைத்து ஆக்ஷன் படம் இயக்க லோகேஷ் கனகராஜ் ஆசை | ராஷ்மிகாவின் மைசா படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியது | பிளாஷ்பேக் : வரிசை கட்டிவந்த யுத்த பிரச்சாரத் திரைப்படங்கள் | அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் நடிப்பதை உறுதி செய்த லோகேஷ் கனகராஜ் | வெற்றிமாறன், சிம்பு படத்தின் புதிய அப்டேட் | ஆகஸ்ட் 1ல் பல படங்கள் போட்டி.. |
சினிமாவில் ஹீரோவாக வேண்டும் என்கிற ஆசையுடன் நுழைந்து பின்னர் வெற்றிகரமான இயக்குனராக பாதை மாறியவர் எஸ்ஜே சூர்யா. எப்படியோ தனது இலக்கான நடிப்புலகிற்கு மீண்டும் திரும்பிய எஸ்ஜே சூர்யா தனது எண்ணப்படியே இறைவி, மான்ஸ்டர், நெஞ்சம் மறப்பதில்லை உள்ளிட்ட பல படங்களில் கதாநாயகனாவும் நடித்தார். ஸ்பைடர், மாநாடு படங்களில் வில்லனாகவும் நடித்தார்.
இதில் சமீபத்தில் வெளியான மாநாடு படத்தில் அவரது வில்லன் நடிப்பு ஹீரோவையே மிஞ்சும் விதமாக இருந்ததுடன் ரசிகர்களின் ஒட்டுமொத்த பாராட்டையும் அள்ளினார். இதைதொடர்ந்து அவர் நடிப்பை வெளிப்படுத்தும் விதமான, ரசிகர்களின் வரவேற்பை பெரும் விதாமான வில்லன் கதாபாத்திரங்களில் நடிக்கவும் அவர் முடிவு செய்துள்ளார் என்று சொல்லப்படுகிறது. அதன் அடுத்த கட்டமாகத்தான் ஆதிக் ரவிவிச்சந்திரன் இயக்கும் படத்தில் விஷாலுக்கு வில்லனாக நடிக்க இருக்கிறாராம் எஸ்ஜே.சூர்யா. இதற்கான பேச்சுவார்த்தை தற்போது நடைபெற்று வருகிறதாம். இதுபற்றிய அறிவிப்பை விரைவில் எதிர்பார்க்கலாம் என்கிறார்கள்.