தக் லைப் படத்தை புகழ்ந்து பதிவிட்ட இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் | சூப்பர் ஹீரோயினாக மாறிய கல்யாணி பிரியதர்ஷன் | ஷோபனாவை அவமதித்த ஊழியர் : படப்பிடிப்பு தளத்தையே நடுங்க வைத்த அமிதாப் பச்சன் | உன்னி முகுந்தன் பிரச்னையில் தலையிட்டு தீர்த்து வைத்த பெப்கா | நடிகையின் தங்கை நகைக்கடையில் 69 லட்சம் நூதன மோசடி செய்த ஊழியர்கள் | விபத்தில் சிக்கிய வில்லன் நடிகரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய சுரேஷ்கோபி | சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகும் கயாடு லோகர், கல்யாணி பிரியதர்ஷன் | ஜப்பானில் தனுஷ், மாரி செல்வராஜ் படத்தின் படப்பிடிப்பு | சர்தார் 2 படப்பிடிப்பு நிறைவு பெற்றது | கமல்ஹாசன் தயாரிப்பில் அருண் குமார்? |
சினிமாவில் ஹீரோவாக வேண்டும் என்கிற ஆசையுடன் நுழைந்து பின்னர் வெற்றிகரமான இயக்குனராக பாதை மாறியவர் எஸ்ஜே சூர்யா. எப்படியோ தனது இலக்கான நடிப்புலகிற்கு மீண்டும் திரும்பிய எஸ்ஜே சூர்யா தனது எண்ணப்படியே இறைவி, மான்ஸ்டர், நெஞ்சம் மறப்பதில்லை உள்ளிட்ட பல படங்களில் கதாநாயகனாவும் நடித்தார். ஸ்பைடர், மாநாடு படங்களில் வில்லனாகவும் நடித்தார்.
இதில் சமீபத்தில் வெளியான மாநாடு படத்தில் அவரது வில்லன் நடிப்பு ஹீரோவையே மிஞ்சும் விதமாக இருந்ததுடன் ரசிகர்களின் ஒட்டுமொத்த பாராட்டையும் அள்ளினார். இதைதொடர்ந்து அவர் நடிப்பை வெளிப்படுத்தும் விதமான, ரசிகர்களின் வரவேற்பை பெரும் விதாமான வில்லன் கதாபாத்திரங்களில் நடிக்கவும் அவர் முடிவு செய்துள்ளார் என்று சொல்லப்படுகிறது. அதன் அடுத்த கட்டமாகத்தான் ஆதிக் ரவிவிச்சந்திரன் இயக்கும் படத்தில் விஷாலுக்கு வில்லனாக நடிக்க இருக்கிறாராம் எஸ்ஜே.சூர்யா. இதற்கான பேச்சுவார்த்தை தற்போது நடைபெற்று வருகிறதாம். இதுபற்றிய அறிவிப்பை விரைவில் எதிர்பார்க்கலாம் என்கிறார்கள்.