டிவி நிகழ்ச்சியில் சவுந்தர்யாவை நினைத்து கண் கலங்கிய ரம்யா கிருஷ்ணன் | மீண்டும் பாலகிருஷ்ணா ஜோடியாக நயன்தாரா நடிப்பது ஏன் | ‛டூரிஸ்ட் பேமிலி' இயக்குனருக்கு பிஎம்டபுள்யூ கார் பரிசு | மாதவன், கங்கனா படத்தின் தலைப்பு என்ன தெரியுமா? | என் துயரத்தை சிலர் கொண்டாடினர் : சமந்தா | போலீஸ் வேடத்தில் சசிகுமார் | 64வது படத்தில் நடிக்க சம்பளத்தை உயர்த்தினாரா அஜித்குமார்? | தமிழ் புத்தாண்டில் சூர்யா-சிம்பு மோதிக்கொள்கிறார்களா? | 'மா இண்டி பங்காரம்' படத்திற்காக தீவிர ஒர்க் அவுட்டில் இறங்கிய சமந்தா! | விஜய் ஆண்டனியின் 'சக்தி திருமகன்' படத்தை பாராட்டிய இயக்குனர் ஷங்கர்! |

ஆடை படத்திற்கு பிறகு அமலாபால் நடிப்பில் வேறு படம் எதுவும் ரிலீசாகவில்லை. அதேசமயம் தனது கவனத்தை வெப்சீரிஸ் பக்கம் திருப்பிய அமலாபால் தெலுங்கில் குடி ஏடமைதே என்கிற வெப் சீரிஸில் நடித்தார். சோஷியல் மீடியாவில் ஆக்டிவாக இருக்கும் அமலாபால் அவ்வப்போது தனது கிளமார் போட்டோக்களையும், பயண வீடியோக்களையும் வெளியிட்டு வந்தார்.
சமீபத்தில் அசாம் மாநிலம் கவுகாத்தியில் உள்ள காமாக்கியா கோவிலுக்கு சென்று தரிசித்து விட்டு வந்துள்ள அமலாபால் நெற்றி நிறைய குங்குமத்துடன் கழுத்தில் பெரிய மாலையுடன் காட்சியளிக்கும் தனது புகைப்படம் ஒன்றையும் வெளியிட்டுள்ளார்.
இதுபற்றி கூறியுள்ள அமலாபால், “அசாமில் நீலாச்சல் மலையில் அமைந்துள்ள காமாக்கியா தேவியை தரிசித்தேன்... பெண்களின் சக்தியின் அம்சமாக இந்த கோவிலுக்குள் சென்றபோது அதன் சக்தியை என்னால் உணரமுடிந்தது.. நானாகவே எனக்குள் ஒரு தாய்மை உணர்வை கொடுத்துக்கொண்டு, அப்படியே எனக்குள் ஒரு குழந்தை இருப்பது போன்ற உணர்வுடன் திரும்பி வந்தேன்” என தத்துவார்த்தமாக கூறியுள்ளார்.