ஜூன் 13ல், 500 தியேட்டர்களில் படை தலைவன் ரிலீஸ் | டூரிஸ்ட் பேமிலி : கன்னட நடிகர் சுதீப் பாராட்டு | ஜனநாயகன் படத்தின் தமிழக தியேட்டர் உரிமையில் கடும் போட்டி | அர்ஜுன் தாஸின் நீண்ட நாள் கனவு நனவாகியது | ஹாலிவுட் யுனிவர்ஸ் பாணியில் உருவாகும் பென்ஸ் : இயக்குனர் பாக்யராஜ் கண்ணன் | தக் லைப் - நடிகர் ரகுமான் மகள் அறிமுகம்: ஏஆர் ரகுமான் வாழ்த்து | மகன் அகில் திருமணம்: அம்மா அமலா நெகிழ்ச்சிப் பதிவு | 'கல்கி 2' படத்தில் தீபிகா நடிக்கிறார்: விலகல் செய்தி வதந்தி… | கூலி படத்தில் இணைந்த டி.ராஜேந்தர் | லவ் மேரேஜ் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
சமீபகாலமாக நடிகைகள் உடல் பருமன் காரணமாக கேலி, கிண்டல்களுக்கு ஆளாவதும் அதற்கு பதில் தருவதும் வாடிக்கையாகி வருகிறது. குறிப்பாக சமீரா ரெட்டி போன்றோர் தாங்கள் குழந்தை பிறப்புக்கு பின் குண்டானதையும் அப்போது வந்து கேலிகள் பற்றியும் பேசி வருகின்றனர். அந்த வரிசையில் சாயிஷாவும் ஒரு பதிவிட்டுள்ளார். ஆனால் குழந்தை பெற்றுக் கொள்பவர்களுக்கு நம்பிக்கை அளிக்கும் வகையில் பதிவிட்டுள்ளார்.
நடிகர் ஆர்யாவை திருமணம் செய்து கொண்ட சாயிஷா குழந்தை பிறந்த பிறகும் அதே உடலமைப்புடன் இருக்கிறார். அடிக்கடி தான் உடற்பயிற்சி செய்யும் வீடியோக்களை, தனது சமூகவலைதளபக்கத்தில் பதிவிட்டு வருகிறார். குழந்தை பிறப்புக்கு பிறகு தான் உடல் எடை குறைத்த ரகசியத்தையும், அதை பற்றிய சில குறிப்புகளையும் கூறியுள்ளார்.
நாம் எவ்வளவு தொடர்ச்சியாக மற்றும் தீவிரமாக பயிற்சி செய்கிறோமோ அப்போது தான் இது சாத்தியமாகும். மேலும் முடியாத காரியங்களில் ஈடுபடுவது ரொம்ப கடினம். ஆகையால் முடியவில்லை என்றால் அதை தவிர்க்க வேண்டும். இல்லையெனில் அதுவே உங்களுக்கு பிரச்சனையை உண்டாக்கும்.
எல்லாப் பெண்களும் அவரவர் பார்வையில் அழகுதான். அதில் நாம் ஒல்லியான உடல் அமைப்பில் இருக்கும் போது அதன் பயன் என்னவென்றால் அது தேவையில்லாத கொழுப்பை குறைத்து விடும். நம்முடைய குறிக்கோள் ஆரோக்கியமாக இருப்பது மட்டுமே. மேலும் இவை அனைத்திற்கும் நிச்சயமாக ஒரு நேரம் காலம் கண்டிப்பாக தேவைப்படும். மற்றவரைப் பார்த்து அவர்கள் மாதிரி ஆக வேண்டும் என நினைக்காதீர்கள். உங்களுடைய உடல் வேறு, உங்களுடைய ஆரோக்கியம் வேறு. அதனால் அதற்கு தகுந்தாற் போல் அமைத்துக் கொள்ளுங்கள் என்று கூறியுள்ளார்.
இந்த புகைப்படத்தை நான் பதிவிட காரணம், உடலை கட்டுக்கோப்பாக வைத்திருப்பதே எனது ஸ்டைல், இது தான் எனக்கு சந்தோஷத்தை கொடுத்தது எனவும் கூறியுள்ளார்.