ரஜினியை கண்டிப்பாக இயக்குவேன் : தேசிங்கு பெரியசாமி வெளியிட்ட தகவல் | மலையாள லெஸ்பியன் படத்திற்கு எதிர்ப்பு | ஹிந்தி படத்தை வெளியிடுவதேன்? உதயநிதி பதில் | சிறந்த அறிமுக ஹீரோவுக்கான விருது பெற்ற சதீஷ் | கவர்னருடன் சந்திப்பு ; மீண்டும் அரசியல் வரும் திட்டமா - ரஜினி பதில் | பாலிவுட் படங்களை புறக்கணிக்கும் கிரித்தி ஷெட்டி | மராட்டிய மொழி படத்தில் ஷான்வி | சர்ச், மசூதி முன்பு பெரியார் சிலை இருக்கிறதா?: கஸ்தூரி கேள்வி | 200 ஆண்களுடன் படுக்கையை பகிர்ந்தேன்: அமெரிக்க நடிகை அதிர்ச்சி தகவல் | கணவன் வீட்டில் அனுபவித்த கொடுமைகள்: மனம் திறந்தார் மகேஸ்வரி |
சமீபகாலமாக நடிகைகள் உடல் பருமன் காரணமாக கேலி, கிண்டல்களுக்கு ஆளாவதும் அதற்கு பதில் தருவதும் வாடிக்கையாகி வருகிறது. குறிப்பாக சமீரா ரெட்டி போன்றோர் தாங்கள் குழந்தை பிறப்புக்கு பின் குண்டானதையும் அப்போது வந்து கேலிகள் பற்றியும் பேசி வருகின்றனர். அந்த வரிசையில் சாயிஷாவும் ஒரு பதிவிட்டுள்ளார். ஆனால் குழந்தை பெற்றுக் கொள்பவர்களுக்கு நம்பிக்கை அளிக்கும் வகையில் பதிவிட்டுள்ளார்.
நடிகர் ஆர்யாவை திருமணம் செய்து கொண்ட சாயிஷா குழந்தை பிறந்த பிறகும் அதே உடலமைப்புடன் இருக்கிறார். அடிக்கடி தான் உடற்பயிற்சி செய்யும் வீடியோக்களை, தனது சமூகவலைதளபக்கத்தில் பதிவிட்டு வருகிறார். குழந்தை பிறப்புக்கு பிறகு தான் உடல் எடை குறைத்த ரகசியத்தையும், அதை பற்றிய சில குறிப்புகளையும் கூறியுள்ளார்.
நாம் எவ்வளவு தொடர்ச்சியாக மற்றும் தீவிரமாக பயிற்சி செய்கிறோமோ அப்போது தான் இது சாத்தியமாகும். மேலும் முடியாத காரியங்களில் ஈடுபடுவது ரொம்ப கடினம். ஆகையால் முடியவில்லை என்றால் அதை தவிர்க்க வேண்டும். இல்லையெனில் அதுவே உங்களுக்கு பிரச்சனையை உண்டாக்கும்.
எல்லாப் பெண்களும் அவரவர் பார்வையில் அழகுதான். அதில் நாம் ஒல்லியான உடல் அமைப்பில் இருக்கும் போது அதன் பயன் என்னவென்றால் அது தேவையில்லாத கொழுப்பை குறைத்து விடும். நம்முடைய குறிக்கோள் ஆரோக்கியமாக இருப்பது மட்டுமே. மேலும் இவை அனைத்திற்கும் நிச்சயமாக ஒரு நேரம் காலம் கண்டிப்பாக தேவைப்படும். மற்றவரைப் பார்த்து அவர்கள் மாதிரி ஆக வேண்டும் என நினைக்காதீர்கள். உங்களுடைய உடல் வேறு, உங்களுடைய ஆரோக்கியம் வேறு. அதனால் அதற்கு தகுந்தாற் போல் அமைத்துக் கொள்ளுங்கள் என்று கூறியுள்ளார்.
இந்த புகைப்படத்தை நான் பதிவிட காரணம், உடலை கட்டுக்கோப்பாக வைத்திருப்பதே எனது ஸ்டைல், இது தான் எனக்கு சந்தோஷத்தை கொடுத்தது எனவும் கூறியுள்ளார்.