மீண்டும் தனுஷூடன் இணையும் சாய் பல்லவி! | 'தி ராஜா சாப்' படத்தில் சிறப்பு தோற்றத்தில் கயல் ஆனந்தி! | புதிதாக மூன்று படங்களை ஒப்பந்தம் செய்த ரியோ ராஜ்! | தேசிய விருது கிடைத்தால் மகிழ்ச்சி: துல்கர் சல்மான் | முதல் முறையாக ரவி தேஜா உடன் இணையும் சமந்தா! | சிம்புவின் மீது இன்னும் வருத்தத்தில் சந்தியா! | 56வது இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் கவுரவிக்கப்படும் ரஜினிகாந்த்- பாலகிருஷ்ணா! | 25 கோடி பட்ஜெட்டில் உருவாகும் படத்தில் லோகேஷ் கனகராஜின் சம்பளம் 35 கோடியா? | அறக்கட்டளை மூலம் 75 பேரை படிக்க வைத்த பிளாக் பாண்டி! | ரஜினிக்கு நடிப்பு சொல்லிக் கொடுத்த வாத்தியாரின் மறைவு |

தமிழ், ஹிந்தி, ஹாலிவுட் என பிஸியாக இருந்து வந்த தனுஷ் முதன்முறையாக நேரடி தெலுங்கு படங்களில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார். தெலுங்கு இயக்குனர் சேகர் கமுலா இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார். இந்தப்படம் அடுத்தாண்டு துவங்கி உள்ளது. இந்நிலையில் மற்றொரு தெலுங்கு இயக்குனரான வெங்கி அட்லுரி இயக்கும் படத்தில் நடிக்கிறார்.
தமிழ், தெலுங்கி உருவாகும் இந்த படத்திற்கு தமிழில் ‛வாத்தி' என பெயரிட்டுள்ளனர். தெலுங்கில் ‛சார்' என பெயர் வைத்துள்ளனர். இப்படத்தை பிரபல தெலுங்கு இயக்குனர் த்ரிவிக்ரம் மனைவி சாய் செஜன்யா மற்றும் நாக வம்சி இணைந்து தயாரிக்கிறார்கள். ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைக்கிறார். இப்படத்தைத்தான் தன்னுடைய முதல் நேரடி தெலுங்குப் படம் எனக் குறிப்பிட்டுள்ளார் தனுஷ். படத்தில் வாத்தியாராக தனுஷ் நடிப்பார் என தெரிகிறது. அதற்கு ஏற்பட்ட தலைப்பு அமைந்திருப்பதோடு பட தலைப்பு போஸ்டரும் வகுப்பறை எழுத்து பலகை, மாணவர்கள் கவனிப்பது மாதிரியான காட்சிகள் அதில் இடம் பெற்றுள்ளன.