Advertisement

சிறப்புச்செய்திகள்

இந்த வார ரிலீஸ் : தியேட்டர்களைக் காப்பாற்றும் 'படையப்பா' | பிறந்தநாள் வாழ்த்து கூறியவர்களுக்கு ரஜினிகாந்த் நன்றி | பாதிக்கப்பட்ட நடிகைக்கு தான் ஆயுள் தண்டனை : நீதிமன்ற தீர்ப்பு குறித்து நடிகை பாக்கியலட்சுமி கருத்து | தியேட்டரில் இயக்குனருக்கும் ரசிகர்களுக்கும் வாக்குவாதம் : சமாதானப்படுத்திய நடிகை | திலீப்பை நடிகர் சங்கத்தில் சேர்ப்பது குறித்து இன்னும் முடிவு எடுக்கவில்லை : ஸ்வேதா மேனன் | 11 மாதங்களுக்கு பிறகு ஓடிடியில் வெளியாகும் டோமினிக் அண்ட் தி லேடீஸ் பர்ஸ் | அகண்டா 2 படத்தின் முதல் நாள் வசூல் ரூ.59.50 கோடி | நடிகை பாலியல் கடத்தல் வழக்கு : ஆறு பேருக்கு 20 வருட சிறை | ஜெயிலர் 2 புது அப்டேட் வராது ஏன்? | 'ஹேப்பி ராஜ்' இரண்டு குடும்பங்களின் கதை |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

வா வாத்தியார் : கை கொடுக்காமல் போன கார்த்தி

13 டிச, 2025 - 10:37 IST
எழுத்தின் அளவு:
Vaa-Vaathiyaar-Karthi-who-refused-to-give-up
Advertisement

தமிழ், தெலுங்கு என பிரபலமாக இருக்கும் நடிகர்களில் ஒருவர் கார்த்தி. அவர்களது குடும்பத்தில் சிவக்குமார், சூர்யா, ஜோதிகா என பல வருடங்களாக பிரபலமாக உள்ளனர். அவர்களது உறவினர்கள், நண்பர்கள் சினிமா தயாரிப்பாளர்களாகவும் உள்ளனர். அவர்களது குடும்பத்தினருக்கும் ஓரிரு சினிமா தயாரிப்பு நிறுவனங்கள் உள்ளன. அது மட்டுமல்லாது நடிகர் சங்கத்திலும் கார்த்தி பொருளாளராக உள்ளார்.

கார்த்தி நடிகராக அறிமுகமான படம் 'பருத்தி வீரன்'. அந்தப் படத்தைத் தயாரித்தது கார்த்தியின் உறவினரான ஸ்டுடியோ க்ரீன் கேஈ ஞானவேல் ராஜா. உறவினராக இருந்தாலும் கார்த்தியை அறிமுகப்படுத்திய தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா. அந்நிறுவனத்தின் தயாரிப்பில் இதற்கு முன்பு 'நான் மகான் அல்ல, சிறுத்தை, மெட்ராஸ், கொம்பன்' ஆகிய வெற்றிப் படங்களில் நடித்துள்ளார் கார்த்தி. 'அலெக்ஸ் பாண்டியன், ஆல் இன் ஆல் அழகுராஜா, பிரியாணி' ஆகியவை தோல்விப் படங்கள்.

சுமார் 10 வருட இடைவெளிக்குப் பிறகு அந்நிறுவனத்தில் கார்த்தி நடித்த படம் 'வா வாத்தியார்'. இப்படமும் இரண்டு வருடங்களாகத் தயாரிப்பில் இருந்து வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்பட்டு அடுத்தடுத்து தள்ளி வைக்கப்பட்டு கடைசியாக நேற்று டிசம்பர் 12 வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால், சுமார் 21 கோடி ரூபாயை நீதிமன்றத்தில் செலுத்தினால் மட்டுமே படத்திற்கான இடைக்காலத் தடை நீக்கப்படும் என்று சென்னை உயர்நீதிமன்றம் சொன்னது. அதையடுத்து படத்தைத் தேதி குறிப்பிடாமல் தள்ளி வைத்தனர்.

ஸ்டுடியோ க்ரீன் நிறுவனம் தயாரிப்பில் கடந்த சில வருடங்களில் வெளிவந்த 'நோட்டா, தேவராட்டம், மிஸ்டர் லோக்கல், மகாமுனி, காட்டேரி, பத்து தல, 80ஸ் பில்ட்அப், ரெபெல், தங்கலான், கங்குவா' ஆகியவை குறிப்பிடத்தக்க லாபத்தையோ, பெரிய லாபத்தையோ தரவில்லை. சில படங்கள் நிறைய நஷ்டத்தைத் தந்தன.

'தங்கலான், கங்குவா' ஆகிய படங்களின் போதும் கடன் தொகை காரணமாக அந்நிறுவனம் நீதிமன்ற வழக்குகளைச் சந்தித்தது. அப்போது ஒரு கோடி ரூபாயை செலுத்தி எப்படியோ படத்தை வெளியிட்டுவிட்டனர். ஆனால், இந்த முறை நீதிமன்றம் மொத்த தொகையையும் செலுத்த வேண்டும் என்பதில் கறாராக இருந்தது.

பொதுவாக முன்னணி நடிகர்களின் படங்கள் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டு இப்படி சிக்கலில் இருந்தால், அந்த நடிகர்களே அவர்களது சம்பளத்தை விட்டுக் கொடுத்தோ அல்லது நிதியுதவி செய்தோ படத்தை வெளியிடுவார்கள். ஆனால், இந்தப் படத்திற்காக கார்த்தி எந்த விதத்திலும் உதவி செய்ய முன் வராதது தமிழ்த் திரையுலகத்தில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

இப்படத்திற்காக சில நாட்களுக்கு முன்பு சென்னையில் ஒரு விழா, ஐதராபாத்தில் ஒரு விழா, சமூக வலைத்தளங்களில் நிறைய புரமோஷன், யு டியூப் பேட்டிகள் என பரபரப்பாகச் செய்தார்கள். தமிழ், தெலுங்கில் இப்படத்தின் வெளியீட்டிற்காகத் தியேட்டர்களும் தயாராக இருந்தது. இருந்தாலும் படம் வெளியாகாமல் போய் பலருக்கும் தடுமாற்றத்தைத் தந்தது.

தமிழ் சினிமா சென்டிமென்ட்படி ஒரு படம் அறிவிக்கப்பட்டு தள்ளிப் போனால் அந்தப் படம் மீதான ரசிகர்களின் ஆர்வம் குறைந்துவிடும் என்று நினைப்பார்கள்.

தமிழ் சினிமாவின் பெருமை மிகு நடிகர், முன்னாள் தமிழக முதல்வர் எம்ஜிஆர் ரசிகராக கார்த்தி இந்தப் படத்தில் நடித்துள்ளார். பலருக்குக் 'கை' கொடுத்து அவர்களது வாழ்க்கையை உயர்த்தியவர் எம்ஜிஆர். அவரது ரசிகராக நடித்த ஒரு படத்திற்கு அவரது பெருமையைக் காப்பாற்றுவதற்காக கார்த்தி 'கை' கொடுத்து 'வாத்தியார்'ஐ எந்த சிக்கலுமின்றி வரவழைத்திருக்கலாம்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
சாந்தனு, அஞ்சலி நாயர் நடிப்பில் ‛மெஜந்தா'சாந்தனு, அஞ்சலி நாயர் நடிப்பில் ... திருப்பதியில் குடும்பத்துடன் சாமி தரிசனம் செய்த ரஜினிகாந்த் திருப்பதியில் குடும்பத்துடன் சாமி ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,சரத்குமார்
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    Tamil New Film Kallapart
    • கள்ளபார்ட்
    • நடிகர் : அரவிந்த் சாமி
    • நடிகை : ரெஜினா
    • இயக்குனர் :ராஜபாண்டி
    Tamil New Film Party
    • பார்ட்டி
    • நடிகர் : ஜெய் ,சரத்குமார்,சந்திரன் (கயல்)
    • நடிகை : ரெஜினா ,நிவேதா பெத்ராஜ்
    • இயக்குனர் :வெங்கட் பிரபு
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2025 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in