நடிகைகள் என்ன பொம்மைகளா? - நித்யா மேனன் கோபம் | பாலியல் குற்றச்சாட்டுக்கு ஆளான ஒளிப்பதிவாளர் குறித்து தயாரிப்பாளர் கரண் ஜோகர் விளக்கம் | கண்ணப்பா ஹார்ட் டிஸ்க் களவு போனதன் பின்னணியில் சகோதரர் : விஷ்ணு மஞ்சு குற்றச்சாட்டு | விக்ரமை இயக்கும் அடங்கமறு இயக்குனர் | மதராஸி படப்பிடிப்பு நிறைவடைந்தது | சமந்தாவின் சுபம் படம் ஜுன் 13ல் ஓடிடியில் வெளியாகிறது | நானியிடம் மன்னிப்பு கேட்ட எஸ்.ஜே.சூர்யா | ஓடிடி தளங்களில் இந்த வாரம் கடும் போட்டி | ரசிகர்கள் ஆதரவு எப்போதும் வேண்டும் : நெகிழும் சிம்ரன் | சிரஞ்சீவியை சந்தித்து வாழ்த்து பெற்ற 'குபேரா' இயக்குனர் சேகர் கம்முலா |
நந்தா, பிதாமகன் படங்களை தொடர்ந்து விஷால் ஆர்யாவை வைத்து பாலா இயக்கிய அவன் இவன் படத்தில் கெஸ்ட் ரோலில் நடித்திருந்தார் சூர்யா. அதனைத் தொடர்ந்து தற்போது மீண்டும் பாலா இயக்கும் படத்தை தயாரித்து நடிக்கப் போகிறார் . இந்தப்படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார். இப்படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு நடிகர் சிவகுமாரின் பிறந்த நாளின் போது வெளியிடப்பட்டது. இந்த நிலையில் தற்போது பாலா, சூர்யா இணையும் படத்தின் படப்பிடிப்பு பிப்ரவரி மாதம் முதல் வாரத்தில் தொடங்க இருப்பது தெரியவந்துள்ளது. இந்தப் படத்துக்காக 60 நாட்கள் கால்சீட் கொடுத்து நடிக்கப்போகிறார் சூர்யா. இதற்கிடையே பிப்ரவரி 4-ஆம் தேதி பாண்டிராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள எதற்கும் துணிந்தவன் படம் திரைக்கு வருகிறது.