சின்மயி மன்னிப்பு : இயக்குனர் பேரரசு பதிலடி | கைவசம் 3 படங்கள் : தமிழில் கால் பதிக்க நினைக்கிறார் கிர்த்தி ஷெட்டி | கிண்டல், கேலி, நெகட்டிவ் எண்ணம் : சமூக வலைதளங்களை தவிர்க்கும் திரைபிரபலங்கள் | நல்ல படம் பண்ணிட்டு ரிட்டையர்டு : கமல்ஹாசன் | விஜய் பட இயக்குனர் உடன் இணையும் சல்மான் | பாண்டிராஜ் படத்தில் ஜெயராம், ஊர்வசி | உறவு பிரியாமல் இருக்க 'பூதசுத்தி விவாஹம்' செய்த சமந்தா | ரஜினி பிறந்தநாளில் ‛எஜமான்' ரீ ரிலீஸ் | மூளை குறைவாக இருப்பதால்தான் நடிகராக இருக்கிறேன்: சிவகார்த்திகேயன் | பிரபல பாலிவுட் இயக்குனரின் வாழ்க்கை வரலாறு படத்தில் நடிக்கும் தமன்னா |

தென்னிந்தியத் திரையுலகின் அழகான காதல் ஜோடி என கருதப்பட்டு கல்யாணமும் செய்து கொண்டு பலரையும் பொறாமைப்பட வைத்தவர்கள் நாகசைதன்யா - சமந்தார். சில வருட திருமண வாழ்க்கைக்குப் பிறகு காதலும், கல்யாணமும் கசந்து இருவரும் பிரிந்தனர்.
சமந்தாவைப் பற்றி வரும் சில செய்திகளில் இன்னமும் அவரது திருமண வாழ்க்கை குறித்தும் வந்து கொண்டிருக்கின்றன. சமீபத்திய பேட்டி ஒன்றில் அது பற்றி சரியான பதில் ஒன்றைக் கொடுத்துள்ளார் சமந்தா.
“அது பற்றி பேசி முடித்துவிட்டேன் என நினைக்கிறேன். அது பற்றி பேசுவது முக்கியம், அதைப் பற்றி பேசியும் முடித்தேன். ஆனால், அதைப் பற்றி திரும்பத் திரும்ப பேச வேண்டியது அவசியமில்லை என நான் நினைக்கிறேன். மக்கள் ஒவ்வொருவருக்கம் பல வித கருத்துக்கள் இருக்கும். ஆனால், நாங்கள் இருவரும் இன்னமும் காதலித்துக் கொண்டும், இருவருக்கும் இடையில் பரிவுடனும்தான் இருக்கிறோம். நாகரீகமான முறையில் மக்கள் அவர்களது வருத்தங்களைப் பதிவு செய்ய வேண்டும் என்று நான் விரும்புகிறேன்,” எனக் கேட்டுக் கொண்டுள்ளார்.




