பெண் இயக்குனரின் பேண்டசி படம் 'மரகதமலை' | 5 ஆண்டுகளாக உருவான 'சையாரா' பாடல்கள் | தக் லைப் படத்தின் சிறப்பு காட்சிக்கு அனுமதி | 7 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள திரைப்பட விருதுகளை வழங்குங்கள்: தமிழக அரசுக்கு கோரிக்கை | கர்நாடகாவில் 'தக்லைப்' வெளியிட வர்த்தக சபை அனுமதிக்கணும்: நடப்பு தயாரிப்பாளர் சங்கம் வலியுறுத்தல் | வெற்றி பயத்தில் ராஷ்மிகா, பூஜா ஹெக்டே | தக் லைப் விவகாரத்தால் கலக்கத்தில் ஜனநாயகன் | பிளாஷ்பேக்: சிவாஜி படத்திற்கு கதை எழுதி தயாரித்த என்.டி.ராமராவ் | சினிமா விழாக்களில் அரசியல்வாதிகள் : கோலிவுட்டில் புது டிரெண்ட் | பிளாஷ்பேக்: சென்னை மாகாணத்தை முதன் முதலில் 'தமிழ்நாடு' என்று அழைத்தது சினிமா |
தென்னிந்தியத் திரையுலகின் அழகான காதல் ஜோடி என கருதப்பட்டு கல்யாணமும் செய்து கொண்டு பலரையும் பொறாமைப்பட வைத்தவர்கள் நாகசைதன்யா - சமந்தார். சில வருட திருமண வாழ்க்கைக்குப் பிறகு காதலும், கல்யாணமும் கசந்து இருவரும் பிரிந்தனர்.
சமந்தாவைப் பற்றி வரும் சில செய்திகளில் இன்னமும் அவரது திருமண வாழ்க்கை குறித்தும் வந்து கொண்டிருக்கின்றன. சமீபத்திய பேட்டி ஒன்றில் அது பற்றி சரியான பதில் ஒன்றைக் கொடுத்துள்ளார் சமந்தா.
“அது பற்றி பேசி முடித்துவிட்டேன் என நினைக்கிறேன். அது பற்றி பேசுவது முக்கியம், அதைப் பற்றி பேசியும் முடித்தேன். ஆனால், அதைப் பற்றி திரும்பத் திரும்ப பேச வேண்டியது அவசியமில்லை என நான் நினைக்கிறேன். மக்கள் ஒவ்வொருவருக்கம் பல வித கருத்துக்கள் இருக்கும். ஆனால், நாங்கள் இருவரும் இன்னமும் காதலித்துக் கொண்டும், இருவருக்கும் இடையில் பரிவுடனும்தான் இருக்கிறோம். நாகரீகமான முறையில் மக்கள் அவர்களது வருத்தங்களைப் பதிவு செய்ய வேண்டும் என்று நான் விரும்புகிறேன்,” எனக் கேட்டுக் கொண்டுள்ளார்.