'டீசலுக்கு' வரவேற்பு உண்டு வருவாய் இல்லை: இயக்குனர் சண்முகம் | பிளாஷ்பேக்: திரைப் பிரபலங்களின் மாற்றத்திற்கு காரணியாய் இருந்த “ஸ்ரீமுருகன்” | ரசிகர் கொலை வழக்கில் நவ-6ல் நடிகர் தர்ஷன் உள்ளிட்ட அனைவரிடமும் வீடியோ கான்பரன்ஸ் விசாரணை | கேரள மாநில திரைப்பட அகாடமி தலைவராக ரசூல் பூக்குட்டி தேர்வு | லோகேஷ் கனகராஜ், வாமிகா கபி நடிக்கும் ‛டிசி' | உறவுகள் பொய் சொன்னால் என்னால் பொறுத்துக் கொள்ள முடியாது : தமன்னா | 15 வருடத்திற்கு பிறகு மலையாள படம் மூலம் ரீஎன்ட்ரி கொடுக்கும் மோகினி | மம்முட்டிக்காக கண்ணூர் கோவிலில் பொன்குடம் நேர்த்திக்கடன் செலுத்திய ரசிகர் | ரெட் லேபிள் படத்தின் முதல் பார்வையை வெளியிட்ட நடிகை சிம்ரன் | இப்ப ஹீரோ, அடுத்து இயக்கம் : புதுமாப்பிள்ளை அபிஷன் ஜீவிந்த் பேட்டி |

தென்னிந்தியத் திரையுலகின் அழகான காதல் ஜோடி என கருதப்பட்டு கல்யாணமும் செய்து கொண்டு பலரையும் பொறாமைப்பட வைத்தவர்கள் நாகசைதன்யா - சமந்தார். சில வருட திருமண வாழ்க்கைக்குப் பிறகு காதலும், கல்யாணமும் கசந்து இருவரும் பிரிந்தனர்.
சமந்தாவைப் பற்றி வரும் சில செய்திகளில் இன்னமும் அவரது திருமண வாழ்க்கை குறித்தும் வந்து கொண்டிருக்கின்றன. சமீபத்திய பேட்டி ஒன்றில் அது பற்றி சரியான பதில் ஒன்றைக் கொடுத்துள்ளார் சமந்தா.
“அது பற்றி பேசி முடித்துவிட்டேன் என நினைக்கிறேன். அது பற்றி பேசுவது முக்கியம், அதைப் பற்றி பேசியும் முடித்தேன். ஆனால், அதைப் பற்றி திரும்பத் திரும்ப பேச வேண்டியது அவசியமில்லை என நான் நினைக்கிறேன். மக்கள் ஒவ்வொருவருக்கம் பல வித கருத்துக்கள் இருக்கும். ஆனால், நாங்கள் இருவரும் இன்னமும் காதலித்துக் கொண்டும், இருவருக்கும் இடையில் பரிவுடனும்தான் இருக்கிறோம். நாகரீகமான முறையில் மக்கள் அவர்களது வருத்தங்களைப் பதிவு செய்ய வேண்டும் என்று நான் விரும்புகிறேன்,” எனக் கேட்டுக் கொண்டுள்ளார்.