24 ஆண்டுகளுக்குப் பிறகு ரீ ரிலீஸ் ஆகும் 'மௌனம் பேசியதே': சூர்யா வெளியிட்ட வீடியோ!! | இளையராஜா பயோபிக் படம் டிராப்பா... : படக்குழு வெளியிட்ட தகவல் | 3 நாளில் ரூ.11 கோடி வசூலித்த ‛வித்லவ்' | தமிழ்நாடு திரைப்பட இயக்குனர் சங்கத்துக்கு தேர்தல்: செல்வமணி, ஆர்.வி.உதயகுமார், பேரரசு போட்டியின்றி தேர்வு | பராசக்தி வெற்றி படமா? | சரத்குமாரின் ‛ஆழி' படத்திற்கு ஆஸ்கர் விருது பெற்ற ரசூல்பூக்குட்டி ஒலிப்பதிவு செய்கிறார் | ஜனநாயகன் படம் மறு தணிக்கை செல்கிறது : விரைவில் வெளியாகுமா? | ஹிந்தியில் ரீமேக் ஆகிறது தலைவர் தம்பி தலைமையில் | உணர்ச்சி பெருக்கில் மேடையில் அழுத பூமிகா | 'ஆவேஷம் 2': அப்டேட் கொடுத்த பஹத் பாசில் |

தெலுங்கில் உப்பெனா என்ற படத்தில் நடித்து பிரபலமானவர் கிர்த்தி ஷெட்டி. இந்தபடத்தில் விஜய் சேதுபதி வில்லனாக நடித்திருந்தார். அதன்பிறகு நானியுடன் ஷ்யாம் சிங்கராய், சுதீர்பாபுடன் ஆ அம்மை குறிஞ்சி மீக்கு செப்பாளி, மிதுனுடன் மச்சர்ல நியோஜகவர்கம் மற்றும் லிங்குசாமி தெலுங்கில் இயக்கி வரும் படம் என நான்கு படங்களை கைவசம் வைத்தி ருக்கிறார்.
இந்தநிலையில் தெலுங்கில் நானி நடித்த மஜ்னு மற்றும் உய்யாலா ஜம்பாலா போன்ற படங்களை இயக்கிய விரிஞ்சி வர்மா அடுத்து தான் இயக்கும் படத்தில் கிர்த்தி ஷெட்டியை கதையின் நாயகியாக நடிக்க வைக்க ஒப்பந்தம் செய்திருக்கிறார். சிரஞ்சீவியின் மூத்த மகள் சுஷ்மிதா இப்படத்தை தயாரிக்கிறார். இந்தபடத்தில் கதையின் நாயகியாக நடிப்பதற்காக கிர்த்தி ஷெட்டிக்கு முன்னணி நடிகைகள் ரேஞ்சுக்கு பெரிய தொகையை சம்பளமாக பேசியிருப்பதாக டோலிவுட்டில் செய்திகள் வெளியாகியுள்ளன.




