பிரபாஸ் படத்திலிருந்து நீக்கப்பட்டாரா ராஷ்மிகா? | விஜய் சேதுபதி படத்தில் தபு : அதிகாரப்பூர்வ அறிவிப்பு | கண்ணப்பா படத்தின் புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு | 'ரெட்ரோ'வில் 90களின் காதல் கதை : கார்த்திக் சுப்பராஜ் தகவல் | பிளாஷ்பேக் : இளையராஜாவின் பாடலுக்காக உருவான படம் | சினிமா சங்கப் பிரச்னைகளில் அரசு தலையிட வேண்டும் : ஆர்கே செல்வமணி கோரிக்கை | உறுதியானது 'லியோ - குட் பேட் அக்லி' ஒற்றுமை | தனுஷ் - மாரி செல்வராஜ் கூட்டணி : மாறிய தயாரிப்பு நிறுவனம் | ஷங்கர் வழியில் எக்ஸ் தளத்தை 'ஆப்' செய்த ஏஆர் முருகதாஸ் | ஆளே இல்லாத வீட்டிற்கு ஒரு லட்சம் கரண்ட் பில் : கங்கனா ஏற்படுத்திய பரபரப்பு |
கீர்த்தி சுரேஷ் மலையாளத்தில் கதாநாயகியாக அறிமுகமானது 2013ல் மோகன்லால் நடிப்பில் பிரியதர்ஷன் இயக்கத்தில் வெளியான கீதாஞ்சலி படத்தில் தான். அதைத் தொடர்ந்து எட்டு வருடங்களுக்கு பிறகு மோகன்லால் நடிக்கும் 'மரைக்கார் ;அரபிக்கடலிண்டே சிம்ஹம்' என்கிற படத்தில் மீண்டும் அவரது இயக்கத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் கீர்த்தி சுரேஷ். இந்த படத்தில் இவரது சிறுவயது தோழர்களான பிரணவ் மோகன்லால், கல்யாணி பிரியதர்ஷன், ஆகியோரும் நடித்துள்ளார்கள்.. வரும் டிச-2ஆம் தேதி இந்தப்படம் வெளியாக இருக்கிறது.
இந்த படத்தில் கீர்த்தி சுரேஷ் ஆர்ச்சா என்கிற இளவரசி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்தப்படம் பதினாறாம் நூற்றாண்டில் நடக்கும் கதை என்பதால் கீர்த்தி சுரேஷின் உருவத்திற்கு யாரை மாடலாக எடுக்கலாம் என்கிற கேள்வி எழுந்தது. அதற்காக வேறு எங்கும் தேடாமல் ரவிவர்மனின் ஓவியங்களில் இருந்தே கீர்த்தி சுரேஷின் தோற்றத்தை வடிவமைத்துள்ளார்கள். இது சமபந்தமான புகைப்படங்களுடன் படத்தில் தான் நடித்துள்ள சில புகைப்படங்களையும் இணைத்து வெளியிட்டுள்ளார் கீர்த்தி சுரேஷ்.