ஸ்லிம்மாக இருக்க ஊசியா : தமன்னா பதில் | நலமாக இருக்கிறேன் : மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பினார் கோவிந்தா | நலமுடன் வீடு திரும்பினார் தர்மேந்திரா | 'கும்கி- 2' படத்திற்கு இடைக்கால தடை போட்ட சென்னை உயர்நீதிமன்றம்! | 'டியூட்' படத்தை அடுத்து ஓடிடிக்கு வரும் 'பைசன்' | ரஜினியின் 'ஜெயிலர்- 2' படத்தில் இணைந்த மேக்னா ராஜ்! | அருள்நிதி, மம்தா மோகன்தாஸ் நடிக்கும் ‛மை டியர் சிஸ்டர்' | விஜய் சேதுபதிக்கு ஜோடியாகும் ‛ஜெய்பீம்' நடிகை | பாடல் வரிகள், டியூன் தானாக வந்தது, எல்லாம் அவன் செயல் : சத்ய சாய்பாபா பாடல் குறித்து தேவா நெகிழ்ச்சி | ஏ.ஆர் ரஹ்மானுடன் ஜானி மாஸ்டர் புகைப்படம் : சர்ச்சை கேள்விகளுக்கு சின்மயி பதிலடி |

கீர்த்தி சுரேஷ் மலையாளத்தில் கதாநாயகியாக அறிமுகமானது 2013ல் மோகன்லால் நடிப்பில் பிரியதர்ஷன் இயக்கத்தில் வெளியான கீதாஞ்சலி படத்தில் தான். அதைத் தொடர்ந்து எட்டு வருடங்களுக்கு பிறகு மோகன்லால் நடிக்கும் 'மரைக்கார் ;அரபிக்கடலிண்டே சிம்ஹம்' என்கிற படத்தில் மீண்டும் அவரது இயக்கத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் கீர்த்தி சுரேஷ். இந்த படத்தில் இவரது சிறுவயது தோழர்களான பிரணவ் மோகன்லால், கல்யாணி பிரியதர்ஷன், ஆகியோரும் நடித்துள்ளார்கள்.. வரும் டிச-2ஆம் தேதி இந்தப்படம் வெளியாக இருக்கிறது.
இந்த படத்தில் கீர்த்தி சுரேஷ் ஆர்ச்சா என்கிற இளவரசி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்தப்படம் பதினாறாம் நூற்றாண்டில் நடக்கும் கதை என்பதால் கீர்த்தி சுரேஷின் உருவத்திற்கு யாரை மாடலாக எடுக்கலாம் என்கிற கேள்வி எழுந்தது. அதற்காக வேறு எங்கும் தேடாமல் ரவிவர்மனின் ஓவியங்களில் இருந்தே கீர்த்தி சுரேஷின் தோற்றத்தை வடிவமைத்துள்ளார்கள். இது சமபந்தமான புகைப்படங்களுடன் படத்தில் தான் நடித்துள்ள சில புகைப்படங்களையும் இணைத்து வெளியிட்டுள்ளார் கீர்த்தி சுரேஷ்.