புஷ்கர் - காயத்ரி அடுத்த படத்தில் சிவகார்த்திகேயன்? | செல்வராகவன் நடிக்கும் புதிய பட அறிவிப்பு! | பைசன் படம் குறித்து இயக்குனர் ராம் வெளியிட்ட தகவல் | ஒர்க் அவுட்டின்போது டிரெண்டிங் பாடலுக்கு நடனமாடிய மிருணாள் தாக்கூர் | ஓடிடியில் வெளியான கமலின் தக் லைப் | சிம்பு படத்தில் சிவராஜ்குமார் இணைகிறாரா? | ஹாரிஸ் ஜெயராஜை கவுரவப்படுத்திய கனடா அரசாங்கம் | அஜித்திடம் ஏமாற்றத்தை வெளிப்படுத்திய விஷ்ணு மஞ்சு | எதிர்பார்ப்பை ஏற்படுத்திய ‛ராமாயணா' : அறிமுக வீடியோ வெளியீடு | மார்கோ 2 நிச்சயம் உருவாகும் : உன்னி முகுந்தன் விலகிய பிறகும் உறுதியாக நிற்கும் தயாரிப்பாளர் |
சூர்யா தயாரித்து நடித்து வெளியான ஜெய்பீம் படம் மிகப்பெரிய சர்ச்சைகளில் சிக்கியது. இப்போதுவரை அந்த பிரச்சினை ஓய்ந்தபாடில்லை. இந்த நேரத்தில் சில தினங்களுக்கு முன்பு வெளியான சிம்புவின் மாநாடு படமும் தற்போது ஒரு சிக்கலில் சிக்கியுள் ளது.
அதாவது, ஜெய்பீம் படத்தில் இடம்பெற்ற காலண்டர் காட்சிக்கு எதிராக பாமகவினர் கொடி பிடித்த நிலையில், தற்போது மாநாடு படத்திற்கு எதிராக பாஜகவினர் கொடி பிடித்துள்ளனர். மாநாடு படத்தில் இந்து - முஸ்லீம் ஒற்றுமைக்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் காட்சிகள் உள்ளன. அதனால் தமிழக அரசு தலையிட்டு அதுபோன்ற காட்சிகளை நீக்க வேண்டும் என்று பா.ஜ., சிறுபான்மையினர் நலத்துறை செயலாளர் வேலூர் இப்ராஹிம் ஒரு கோரிக்கை வைத்துள்ளார்.
அதோடு, மாநாடு படத்தில், அமெக்காவில் குண்டு வெடிச்சா பயங்கரவாதி என்கிறோம். இந்தியாவில் வெடித்தால் முஸ்லீம் பயங்கரவாதி என்கிறோம். பயங்கரவாதிக்கு ஏது சாதி மதம் என்று இஸ்லாமியராக நடித்துள்ள சிம்பு பேசுவதையும் குறிப்பிட்டுள்ள பா.ஜ.,வினர், அப்படத்தின் கடைசி காட்சியில் ரயில் நிலைய பெயர் பலகையில் ஹிந்தி எழுத்துக்கள் அழிக்கப்பட்டிருப்பதை காண்பிப்பதற்கும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இந்த விவகாரம் மாநாடு படத்திற்கு எந்தமாதிரியான ரியாக்சனை ஏற்படுத்தப்போகிறதோ? பொறுத்திருந்து பார்ப்போம்.