இரவில் சிரித்து பேசிய தந்தையை காலையில் உயிருடன் பார்க்கவில்லை : ஷைன் டாம் சாக்கோ உருக்கம் | இசையமைப்பாளர் ஆனார் இளையராஜா பேரன் | விடுமுறை நாளிலும் வசூலில் ஏமாற்றிய தக் லைப் | நாக சைதன்யாவை காதலித்தபோது கழுத்தின் பின்பகுதியில் குத்திய டாட்டூவை நீக்கிய சமந்தா | தக் லைப் படத்தை புகழ்ந்து பதிவிட்ட இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் | சூப்பர் ஹீரோயினாக மாறிய கல்யாணி பிரியதர்ஷன் | ஷோபனாவை அவமதித்த ஊழியர் : படப்பிடிப்பு தளத்தையே நடுங்க வைத்த அமிதாப் பச்சன் | உன்னி முகுந்தன் பிரச்னையில் தலையிட்டு தீர்த்து வைத்த பெப்கா | நடிகையின் தங்கை நகைக்கடையில் 69 லட்சம் நூதன மோசடி செய்த ஊழியர்கள் | விபத்தில் சிக்கிய வில்லன் நடிகரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய சுரேஷ்கோபி |
ஷங்கர் இயக்கத்தில் ராம்சரண் இரண்டு வேடங்களில் நடித்து வரும் பெயரிடப்படாத படத்தில் கியாரா அத்வானி, அஞ்சலி, சுரேஷ் கோபி, ஸ்ரீகாந்த் உட்பட பலர் நடிக்கிறார்கள். அனிருத் இசையமைக்கும் இந்தப் படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு புனேயில் நடந்து முடிந்து உள்ளது. இந்த நிலையில் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு தற்போது ஐதராபாத்தில் நடைபெறுகிறது. இதில் ராம்சரண்- கியாரா அத்வானி பங்குபெறும் ஒரு டூயட் பாடல் காட்சியை பிரமாண்டமாக படமாக்கினார் ஷங்கர் . இதற்காக போடப்பட்டுள்ள பிரம்மாண்ட செட்டில் ராம்சரண் கியாரா அத்வானி உடன் இணைந்து நடனமாட வெளிநாட்டிலிருந்து நூற்றுக்கும் மேற்பட்ட நடன கலைஞர்கள் வந்துள்ளார்கள். ஷங்கர் படங்களில் வழக்கமாக இடம்பெறும் பிரம்மாண்டத்திற்கு இணையாக இந்த படத்தின் பாடல் காட்சிகள் ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு விதமாக உருவாக்க எண்ணி உள்ளனர். தில் ராஜு தயாரிக்கும் இந்தப்படம் அடுத்த ஆண்டு இறுதியில் திரைக்கு வருகிறது.