எனக்கும் ஒரு எதிர்காலம் உள்ளது... வதந்தி பரப்பாதீங்க : பவித்ரா லட்சுமி | பிரியங்கா மோகனின் துருக்கி கனவு நனவானது | லவ் இன்ஷுரன்ஸ் கம்பெனி - அப்டேட் கொடுத்த விக்னேஷ் சிவன் | கார் பந்தய பயிற்சியின்போது மீண்டும் விபத்தில் சிக்கிய அஜித் | ரீ-ரிலீஸில் சச்சின் படத்தின் முதல் நாள் வசூல் எவ்வளவு | விவாகரத்து நெருங்கிவிட்டது என பதிவு போட்ட ரசிகருக்கு சோனாக்ஷி கொடுத்த பதிலடி | ரயில் ஜன்னல் கம்பி வழியாக மாளவிகா மோகனனிடம் முத்தம் கேட்ட மர்ம நபர் | ரெட்ரோ படத்தின் டிரைலரை உருவாக்கிய அல்போன்ஸ் புத்ரன் | கேரள அரசு விருதை கட்டி அணைத்தபடி தூங்கிய பிரேமலு நடிகர் : வைரலாகும் புகைப்படம் | போதை பொருள் வழக்கு : நடிகர் சைன் டாம் சாக்கோ கைது |
இயக்குனர் செல்வராகவன் சாணிக்காயிதம் என்ற படத்தில் நடித்துள்ளார். அடுத்து விஜய்யின் பீஸ்ட் படத்தில் நடித்து வருகிறார். அதோடு தனுஷ் நடிக்கும் நானே வருவேன் என்ற படத்தையும் இயக்கி வருகிறார். இந்துஜா நாயகியாக நடிக்கும் இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். இந்த நிலையில் ‛‛வாழ்க்கை முடிந்தது இனிமேல் ஒன்றுமில்லை என்று நினைக்கும் போதெல்லாம் கடவுள் ஒரு கதவை திறக்கிறார். வேதனை இன்றி விடியல் இல்லை'' தெரிவித்து இருந்தார் செல்வராகவன்.
இதற்கு இயக்குனர் சேரன் பதில் கொடுத்திருந்தார். அதில், ‛‛சில நேரம் வேதனை அனுபவிக்கும் மனிதராக இருப்போம். சில சமயம் கதவுகளை திறக்கும் கடவுளாக இருப்போம் வாருங்கள். உங்கள் படங்களால் வாழ்க்கை உயர்வை அடைந்தவர்களுக்கு நீங்கள் கடவுளைப் போலவே செல்வா...'' என கூறியிருந்தார்.
அதற்கு நன்றி கூறி உள்ளார் செல்வராகவன். அன்பான வார்த்தைகளுக்கு நன்றி சார். தங்களின் ஆட்டோகிராப் உட்பட பல படங்கள் எங்களுக்கு மிகப் பெரும் ஆறுதலாக இருந்திருக்கின்றன. தங்களின் படங்களை எதிர்பார்க்கும் பல்லாயிரக்கணக்கான ரசிகர்களில் ஒருவன் என கூறியுள்ளார்.