வேண்டுமென்றே சர்ச்சை... நீக்காவிட்டால் சட்ட நடவடிக்கை: ராஷ்மிகா எச்சரிக்கை | சிம்புவை அணுகிய சூர்யா 47 படக்குழு | பிளாஷ்பேக்: பாடலாசிரியராக, வசனகர்த்தாவாக கலையுலகின் கவனம் ஈர்த்த இயக்குநர் கே எஸ் கோபாலகிருஷ்ணன் | காமெடி கலந்த க்ரைம் த்ரில்லர் படங்கள்: இந்த வார ஓடிடி வரவுகள்...! | மகேஷ் பாபு ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்ட பவன் கல்யாண் பட இயக்குனர் | தள்ளிப்போகிறதா 'பேட்ரியாட்' ரிலீஸ் ? தேதி குறிப்பிடாமல் வெளியான போஸ்டர் | சாய் பல்லவி நடித்துள்ள ஏக் தின் ஹிந்தி படத்தின் டிரைலர் வெளியானது | மும்பை துப்பாக்கிச்சூடு சம்பவத்தை மையப்படுத்தி உருவாகும் படத்தில் செவிலியராக நடிக்கும் கங்கனா | என் மனைவி ஆர்த்தி இல்லை என்றால் தயாரிப்பாளராகி இருக்க மாட்டேன் : சிவகார்த்திகேயன் | ஸ்வேதா மேனன் மீதான வழக்கை தள்ளுபடி செய்த உயர்நீதிமன்றம் |

குஷ்பு, சுந்தர் சி தம்பதிகளின் இரண்டாவது மகள் அவந்திகா நடிகை ஆகிவிட்டார். வெளிநாட்டில் நடிப்பு பயிற்சி பெற்று திரும்பி உள்ள அவர் 'ஆரம்பம்' என்ற மலையாள படத்தின் மூலம் ஹீரோயின் ஆகியிருக்கிறார். அதோடு தமிழில் 'டபுள் ஆக்குபன்சி' என்ற படத்திலும் நடித்து வருகிறது.
நடிக்க வந்தது பற்றி அவர் கூறியிருப்பதாவது: நான் நடிகை ஆகப்போகிறேன் என்று சொன்னதும், அம்மாவும் அப்பாவும் முழு சுதந்திரம் கொடுத்தார்கள். சினிமா சாதாரண விஷயம் இல்லை. கொஞ்சம் கடினமானது பார்த்துக் கொள் என்று மட்டும் அறிவுரை சொன்னார்கள். சில ஆண்டுகளுக்கு முன்பே நான் நடிக்க தயார் ஆகிவிட்டேன். உடம்பை ஸ்லிமாக்கி, நடிப்பு பயிற்சி பெற்று தயாரான பிறகுதான் வாய்ப்பு தேடினேன்.
அப்பா அம்மா சொன்ன மாதிரி சினிமாவை சீரியசாக எடுத்துக் கொண்டு வந்திருக்கிறேன். சில வருடங்கள் என்னை அம்மாவோடு ஒப்பிடுவார்கள். இதனை தவிர்க்க முடியாது. அம்மாவிற்கு கிடைத்த மாதிரியான கேரக்டர்கள் எனக்கு கிடைக்க வேண்டும், அவர்கள் கொடுத்த உழைப்பு, அக்கறையை நானும் கொடுக்க வேண்டும்.
அம்மாவின் ஜீன் என்னிடம் உள்ளது. அதோடு நான் கடுமையாக உழைக்கும்போது அம்மா இடத்திற்கு வர முடியும் என்று நினைக்கிறேன். அப்பா அம்மா என் விஷயத்தில் தலையிடாமல் சுதந்திரம் கொடுத்திருக்கிறார்கள். நானே கதை கேட்கிறேன். நானே முடிவு செய்கிறேன். மக்களுக்கு பிடித்த நல்ல நடிகையாக நிச்சயம் வருவேன். அதற்காக கடினமாக உழைப்பேன், என்கிறார்.




