2026 கோடை விடுமுறையில் திரைக்கு வரும் விஷாலின் 'மகுடம்'! | காதலருடன் பிரேக்ப்பா? வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த பிரியா பவானி சங்கர்! | அருள் நிதியின் 'டிமான்டி காலனி -3' படத்தின் போஸ்டர் வெளியானது! | வித் லவ் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு | புத்தாண்டு பிறந்தாச்சு..... ஓடிடியில் புதுப்படங்களும் வரிசை கட்ட ஆரம்பிச்ச்சாச்சு....! | ‛ஸ்பிரிட்' படத்தின் முதல் பார்வை வெளியீடு | 'சல்லியர்கள்' படத்தை திரையிட தியேட்டர் இல்லை: தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி வேதனை | ரஜினிகாந்த்தின் ஆசைகள் 2026ல் நிறைவேறுமா? | இளையராஜா இசையில் பாடிய அறிவு, வேடன் | சென்னை பெரம்பூர் பின்னணி கதையில் ரோஜா |

'ஒத்த செருப்பு' படத்திற்குப் பிறகு தமிழில் பார்த்திபன் இயக்கி வரும் படம் 'இரவின் நிழல்'. ஏ.ஆர்.ரஹ்மான் இப்படத்திற்கு இசையமைக்கிறார். இருவரும் இணையும் முதல் படம் இது. 20 வருடங்களுக்கு முன்பு இருவரும் இணைந்து பணி புரிவதாக அறிவிக்கப்பட்ட 'ஏலேலோ' படம் நடக்காமல் போய்விட்டது.
இப்படத்தில் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் பார்த்திபன் பாடல் ஒன்றை எழுதியுள்ளார். அது குறித்து பார்த்திபன் டுவிட்டரில், “இரவின் நிழல்' - ஏ.ஆர்.ரஹ்மான் இசை ம்யூரல்! பின்னணி இசைக்காக அவர் குரலில் ஒரு ட்யூனை அனுப்பி என்னை எழுதச் சொன்னார். கேட்ட நொடி முதல் கிறங்கிக் கிடக்கிறேன் high-யில். இறங்கி வந்து அந்த abstract tune-க்கு வரி வடிவம் கொடுக்கும் முயற்சியில் ஒரு வாரம் மூழ்க, பதிவும் செய்யப்பட்டது.
சங்குக்குள் அடக்கப்பட்ட கங்கை போல், முழு படத்தின் வீரியத்தையும் ஒரு பாடலில்.சிலிர்த்து சிறகடித்து பறக்கிறேன் பரவசத்தில். ரசித்து சமைத்தால் தானே இலைக்கு(திரைக்கு)வரும்போது ருசிக்கும்,” எனப் பதிவிட்டுள்ளார்.
'ஒத்த செருப்பு' படம் போலவே ஒரு புதுமையான முயற்சியில் இந்த 'இரவின் நிழல்' படத்தைப் பார்த்திபன் எடுத்து வருவதாகத் தெரிகிறது.