'மாரீசன்' படம் ஜூலை 25ல் வெளியாகிறது | ராஜமவுலி படம் மூலம் இந்திய திரையுலகிற்கு திரும்புவது உற்சாகம் : பிரியங்கா சோப்ரா | 7500 தியேட்டர்களில் வெளியாகும் வார் 2 | கால வரையறையின்றி ஒத்திவைக்கப்பட்ட அனுஷ்காவின் ‛காட்டி' | ஹீரோவாகும் ‛டூரிஸ்ட் பேமிலி' இயக்குனர் அபிஷன் ஜீவிந்த் | வேள்பாரி நாவலில் ரஜினிகாந்த்? | பாராட்டுக்கள் கிடைத்தும் வசூலை அள்ளாத 'கண்ணப்பா' | 50வது நாளைக் கடந்த 'மாமன்', நன்றி தெரிவித்த சூரி | ஹரிஹர வீரமல்லு : யு டியூபில் மட்டும் 60 மில்லியன் பார்வைகள் | 'சப்தம்' படத்தை ஓடிடியில் வெளியிட நீதிமன்றம் தடை |
பாகுபலி படங்கள் மூலம் சர்வதேச அளவில் பிரபலம் அடைந்தவர் ராஜமவுலி. இந்த படத்திற்கு பிறகு ராஜமவுலி இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம். ஆர்.ஆர்.ஆர். சுதந்திர போராட்ட வீரர்களான சீதராமராஜு, கொமராம்பீம் ஆகியோர் வாழ்க்கையை தழுவி எடுக்கப்படும் இப்படம் பாகுபலியை விட பலமடங்கு பிரம்மாண்டமாக தயாராகி வருகிறது.
இந்த படத்தில் தெலுங்கின் முன்னணி நடிகர்களான ராம் சரண் மற்றும் ஜூனியர் என்.டி.ஆர் ஆகிய இருவரும் இணைந்து நடித்துள்ளனர். இந்த படத்தின் பணிகள் முழுவதுமாக முடிந்துள்ள நிலையில் ராஜமவுலியின் அடுத்த ஹீரோ யாராக இருக்கும் என்ற எதிர்பார்ப்பு நிலவியது. இதையடுத்து மகேஷ் பாபுவை வைத்து புதிய படம் இயக்குவதாக உறுதியான தகவல்கள் கசிந்து வருகிறது.
இந்நிலையில் இப்படத்தில் வில்லனாக நடிக்க நடிகர் விக்ரமிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. பொதுவாக ராஜமவுலி படங்களில் வில்லனுக்கு அதிக முக்கியத்துவம் இருக்கும். நான் ஈ சுதீப், பாகுபலி ராணா என ஹீரோக்களே விரும்பி நடிப்பார்கள். அந்த வரிசையில் விக்ரமும் இணைவார் என எதிர்பார்க்கப்படுகிறது.