‛கில்லர்' முதல்கட்ட படப்பிடிப்பை முடித்துவிட்டு ‛ஜெயிலர்-2'வில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! | காரில் கோளாறு: ஷாரூக்கான், தீபிகா படுகோனே மீது வழக்கு | ‛வார் - 2' படம் தோல்வி அடைந்ததால் ஜூனியர் என்டிஆரின் அடுத்த படத்தை கைவிட்ட நிறுவனம்! | எனது சொகுசு பங்களா வீடியோவை உடனே நீக்குங்கள்! - ஆலியா பட் வைத்த ஆவேச கோரிக்கை | 23 வருடங்களுக்கு பிறகு ரீ ரிலீஸ் ஆகும் ‛ரன்' | சிவகார்த்திகேயனுக்கு போட்டியா : ‛கேபிஒய்' பாலா பதில் | பிளாஷ்பேக்: திகைக்க வைக்கும் 'த்ரில்லர்' திரைப்படத்தின் நாயகனாக எம் என் நம்பியார் நடித்த “திகம்பர சாமியார்” | லவ் இன்சூரன்ஸ் கம்பெனி படத்தின் ‛பர்ஸ்ட் பன்ச்' எப்படி இருக்கு? | மகுடம் படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியானது! | ஷாலின் சோயாவின் இயக்குனர் ஆசை! |
நடிகர் அருண் விஜய் கைவசம் அரை டஜன் படங்கள் உள்ளன. இவற்றில் பார்டர், அக்னிச்சிறகுகள், சினம், பாக்ஸர் படங்கள் அடுத்தடுத்து திரைக்கு வர உள்ளன. தற்போது தனது மைத்துனரும், இயக்குனருமான ஹரி இயக்கத்தில் யானை படத்தில் நடித்துள்ளார். சமீபத்தில் இதன் படப்பிடிப்பு முடிந்தது. இந்நிலையில் நேற்று தனது 43வது பிறந்தநாளை கொண்டாடினார் அருண் விஜய். பிறந்தநாளை முன்னிட்டு அவரது ரசிகர்கள் 40 பேர் உடன் இணைந்து தானும் சென்னை, ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் ரத்த தானம் செய்தார்.
அருண் விஜய் கூறுகையில், ‛‛ரசிகர்கள் மேலும் ஒரு அரிய செயலை முன்னெடுத்துள்ளனர். ரத்த தானம் செய்ததோடு அல்லாமல், அவசர தேவையாக எப்போது இரத்தம் தேவைப்பட்டாலும் ரசிகர் மன்றம் மூலம், தேவைப்படுவோர்க்கு இரத்த தானம் அளிக்க முடிவு செய்துள்ளனர். ரசிர்களின் இந்த செயலுக்கும், அன்புக்கும் நன்றி'' என்றார்.