'லியோ'வில் என்னை வீணாக்கினார் லோகேஷ் : சஞ்சய் தத் கமெண்ட் | 68 வயதில் 3 நடிகைகளுடன் டான்ஸ் : கெட்ட ஆட்டம் போட்ட மொட்ட ராஜேந்திரன் | ஆடி வெள்ளி ரீமேக்கில் நயன்தாராவுக்கு பதில் திரிஷா | இளையராஜா வீட்டு மருமகள் ஆகி இருக்கணும்... : புது குண்டு போட்ட வனிதா, நடந்தது என்ன? | அனுபவசாலிகள் இல்லாத கட்சி வெற்றி பெறாது : சொல்கிறார் நடிகர் ரஜினி | ஷங்கரின் கனவுப்படம் 'வேள்பாரி' : தயாரிக்கப் போவது யார் ? | 'மோனிகா' பூஜாவை விட ரசிகர்களைக் கவர்ந்த சவுபின் ஷாகிர் | பிளாஷ்பேக் : அருக்காணியால் தயங்கிய பாக்யராஜ் | பிளாஷ்பேக் : அதிக சம்பளம் பெற்ற கதாசிரியர் | குரு பூர்ணிமாவில் அமிதாப் பச்சன் சிலையை வைத்து வழிபாடு |
பிரபல எழுத்தாளரும், நடிகருமான பாரதி மணி(84) வயது மூப்பு காரணமாக காலமானார். நாகர்கோவில், பார்வதிபுரத்தில் பிறந்தவர் கே.கே.எஸ்.மணி எனும் பாரதி மணி. இளமை காலங்களில் நாடகங்களில் நடித்து வந்த இவர் பின்னர் சினிமாவில் குணச்சித்ர வேடங்களில் நடித்தார். ‛‛பாபா, பாரதி, ஆட்டோகிராப், ஐ'' உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். பாரதியாரின் வாழ்க்கை வரலாறு படமான பாரதியில், பாரதியாருக்கு தந்தையாக நடித்ததால் 'பாரதி' மணி என அழைக்கப்பட்டார்.
'பல நேரங்களில் பல மனிதர்கள்' என்ற தனது புத்தகத்திலிருந்த கட்டுரைகளும், நேர்காணல்கள், குறிப்புகள் இவைகளையெல்லாம் சேர்த்து ஒரு முழுத்தொகுப்பாக “புள்ளிகள் கோடுகள் கோலங்கள்” என்ற புத்தகத்தை வெளியிட்டார். சென்னையில் வசித்து வந்த இவர் வயது மூப்பால் நேற்று நள்ளிரவு காலமானார்.