ராஜமவுலி தயாரிப்பில் பஹத் பாசில் புதிய பட படப்பிடிப்பு துவங்கியது! | இசைத்துறையில் சாதிக்க என்ன செய்ய வேண்டும்? அழகாக சொல்கிறார் அனுராதா ஸ்ரீராம் | 'காந்தாரா சாப்டர் 1' ஹிட்: ஆன்மிக பயணம் செல்லும் ரிஷப் ஷெட்டி | ரஜினி பிறந்தநாளில் பிரமாண்டமாக ரீ ரிலீஸ் ஆகும் அண்ணாமலை! | இயக்குனர் கென் கருணாஸ் உடன் இணைந்த ஜி.வி. பிரகாஷ்! | 'பள்ளிச்சட்டம்பி' படப்பிடிப்பை நிறைவு செய்த கயாடு லோஹர் | நள்ளிரவு பூஜை நடத்திய பூ நடிகை | துக்கடா வேடங்களை ஒதுக்கும் புயல் காமெடியன் | எண்பதுகளின் கதாநாயகியை நினைவூட்டும் அனுபமா; நடிகை கோமலி பிரசாத் பாராட்டு | 'லோகா 2' மற்றும் 'பிரேமலு 2'வில் நான் இருக்கிறேனா ? மமிதா பைஜூ பதில் |
சமீபத்தில் வெளியான அண்ணாத்த, ஜெய்பீம் படத்தின் மூலம் தமிழில் மீண்டும் லைம் லைட்டிற்குள் வந்திருக்கிறார், பிரகாஷ்ராஜ். ஐதராபத்தில் தற்போது குடும்பத்துடன் வசிக்கும் அவர் கடந்த சில தினங்களுக்கு முன்பு வழக்கமான மருத்துவ பரிசோதனை செய்து கொண்டார். அப்போது அவர் தொண்டையில் இன்பெக்சன் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதனால் ஒரு வாரம் வரை அதிகம் பேசாமல் இருப்பது நல்லது என்று டாக்டர்கள் அறிவுறுத்தி உள்ளனர்.
இதுகுறித்து பிரகாஷ்ராஜ் கூறியதாவது : ‛‛டாக்டர்கள் முழு பரிசோதனை செய்தனர். நான் நன்றாக இருக்கிறேன். என்னுடைய குரல் வளைக்கு மட்டும் தான் ஒரு வாரம் வரை ஓய்வு தேவைப்படுகிறது . அதனால் நான் மவுன விரதம் இருக்க போகிறேன்'' என்று தெரிவித்துள்ளார்.