அம்மாவாக நடிப்பது பெருமை... வயது தடையில்லை : ஐஸ்வர்யா ராஜேஷ் | பிளாஷ்பேக்: கனவில் அறிமுகமாகி, காலம் இணைத்து வைத்த காதல் மனங்களின் “மனோன்மணி” | நயன்தாரா ஆவணப்படத்தில் 'சந்திரமுகி' காட்சிகள்: நஷ்டஈடு கோரி மேலும் ஒரு வழக்கு | கூலி படத்திற்காக இரண்டு ஆண்டுகளாக கடின உழைப்பை போட்ட லோகேஷ் கனகராஜ் | ‛டிமான்டி காலனி 3' படப்பிடிப்பை தொடங்கிய அஜய் ஞானமுத்து | முதல் படத்திலேயே அதிர்ச்சி தோல்வியை சந்தித்த சூர்யா சேதுபதி | டாக்சிக் படத்தில் இணைந்த அனிருத் | ‛இவன் தந்திரன் 2'ம் பாகம் படப்பிடிப்பு துவங்கியது | பூரி ஜெகன்னாத் படத்தில் விஜய் சேதுபதி; ஹைதராபாத்தில் துவங்கியது படப்பிடிப்பு | தயாரிப்பாளர் கே.ஜே.ஆர் ராஜேஷின் கதாநாயகனாக 2வது பட அறிவிப்பு |
தெலுங்கு, தமிழ் திரையுலகத்தில் முன்னணி நடிகையாக இருப்பவர் சமந்தா. தமிழை விட தெலுங்கில் தான் அதிக ஹிட் படங்களில் நடித்திருக்கிறார். சமந்தா நடித்த தெலுங்குப் படங்களில் முக்கிய படமான 'ரங்கஸ்தலம்' படத்தை இயக்கிய சுகுமார் அடுத்து அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா நடிக்கும் 'புஷ்பா' படத்தை இரண்டு பாகங்களாக இயக்கி வருகிறார்.
இப்படத்தில் ஒரே ஒரு பாடலுக்கு மட்டும் நடனமாட உள்ளார் சமந்தா. இயக்குனர் சுகுமார் கேட்டுக் கொண்டதற்காக இப்படி நடனமாட சம்மதித்துள்ளாராளம்.
இது பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை தயாரிப்பு நிறுவனம் நேற்று வெளியிட்டது. அல்லு அர்ஜுனுடன் இணைந்து அந்தப் பாடலில் சமந்தா நடிக்கப் போகிறாராம். சமந்தாவின் திரையுலக வாழ்க்கையில் ஒரு படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாடுவது இதுதான் முதல் முறையாம். அதனால், இந்தப் பாடலை மிகவும் ஸ்பெஷலாகப் படமாக்க உள்ளார்களாம்.
இந்த ஒரு பாடலுக்கு நடனமாட சமந்தாவுக்கு சம்பளமாக ஒன்றரை கோடி கொடுக்க உள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது. தென்னிந்தியத் திரையுலகத்தில் ஒரு பாடலுக்கு நடனமாட ஒரு நடிகைக்கு இதுவரை வழங்கப்பட்ட சம்பளங்களிலேயே இதுதான் அதிகம் என்கிறார்கள்.