ஜனநாயகன் குறித்து மகிழ்ச்சியான செய்தி | கலாபவன் மணியின் கனவை நனவாக்கிய மகள் | பேட்ரியாட் படத்தை திரையிடுவதில் கேரள திரையரங்குகள் திடீர் போர்க்கொடி | ஆக்ஷன் மோட் ஆன் : துரந்தர் 2 டிரைலர் வெளியானது | திருமணத்திற்கு ஜோடியாக வந்ததற்கு பதிலடிதான் சங்கீதாவின் புதிய மனு ? | சிரஞ்சீவி, கமல் உள்ளிட்டோருக்கு 2025ன் தெலங்கானா மாநில சினிமா விருதுகள் அறிவிப்பு | 'மேட் இன் கொரியா' இயக்குனர் மனைவியின் கதை : பிரியங்கா மோகன் | இசையில் மட்டும்தான் கவனம்: நடிப்பு தகவலுக்கு முற்றுப்புள்ளி வைத்த சாய் அபயங்கர் | ப்ளடி பாலிட்டிக்ஸ் : கொடி கம்ப அரசியல் | சந்தானம் ஜோடியான கோபிகா ரமேஷ் |

மணிரத்னம் இயக்கிய ரோஜா படத்தில் இசையமைப்பாளர் ஆனவர் ஏ.ஆர்.ரஹ்மான். முதல் படத்திலேயே தேசிய விருது பெற்றார். இதனால் குறுகிய காலத்தில் பாலிவுட், ஹாலிவுட் என்று வேகமாக வளர்ந்து விட்டார். அதோடு, ஆஸ்கர் விருதும் பெற்று உலக அளவில் பேசப்படும் இசையமைப்பாளரானார்.
இந்தநிலையில் தற்போது ரஹ்மான் அளித்துள்ள ஒரு பேட்டியில், ரஜினி படங்களுக்காக தான் கடினமாக உழைத்ததாக தெரிவித்துள்ளார். அதாவது ரஜினி நடிக்கும் படங்களை மார்ச் மாதத்தில் தொடங்கும் தயாரிப்பாளர்கள் தீபாவளிக்கே படம் ரிலீஸ் என்பார்கள். அதனால் படம் வெளியாகும் கடைசி நேரத்தில் பின்னணி இசையமைக்க சொல்வார்கள். இதனால் மற்ற நடிகர்களின் படங்களைவிட ரஜினி படங்களுக்காக பல இரவுகள் தூங்காமல் உழைத்தி ருக்கிறேன். அதுவும் எனது ஸ்டுடியோ அமைந்துள்ள பகுதியில் அடிக்கடி பவர்கட் ஆகும் என்பதால் ஜெனரேட்டர் உதவியுடன் பணியாற்றினேன். ரஜினி படம் என்பதால் மற்ற நடிகர்களின் படங்களை விட அவரது படங்களுக்கே முன்னுரிமை கொடுக்க வேண்டிய சூழலும் ஏற்பட்டது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.




