ஏ.ஆர்.ரஹ்மானின் இசை நிகழ்ச்சியை காண முடியாமல் போனவருக்கு ரூ.50 ஆயிரம் இழப்பீடு வழங்க உத்தரவு | துருவ நட்சத்திரம் : சிம்ரன் அளித்த உறுதி | குபேரா படத்தின் ரன்னிங் டைம் எவ்வளவு | பிளாஷ்பேக்: விஜயகாந்த் நடிக்க மறுத்து, மம்மூட்டி நடித்து வெற்றி பெற்ற திரைப்படம் | தர்மேந்திரா உடன் மீண்டும் இணைந்து நடிக்கும் அர்பாஸ் கான் | வெற்றிக்காக ஏங்கும் நயன், விக்கி | 25வது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் அஜித்தின் 'சிட்டிசன்' | ரவி மோகன் படத்தலைப்பு ‛ப்ரோ கோட்' : நான்கு ஹீரோயின்கள் | விஜய் மில்டன் படத்தில் சுனில் | 'முத்த மழை' சர்ச்சை பற்றி எதுவும் பேசாத தீ |
மணிரத்னம் இயக்கிய ரோஜா படத்தில் இசையமைப்பாளர் ஆனவர் ஏ.ஆர்.ரஹ்மான். முதல் படத்திலேயே தேசிய விருது பெற்றார். இதனால் குறுகிய காலத்தில் பாலிவுட், ஹாலிவுட் என்று வேகமாக வளர்ந்து விட்டார். அதோடு, ஆஸ்கர் விருதும் பெற்று உலக அளவில் பேசப்படும் இசையமைப்பாளரானார்.
இந்தநிலையில் தற்போது ரஹ்மான் அளித்துள்ள ஒரு பேட்டியில், ரஜினி படங்களுக்காக தான் கடினமாக உழைத்ததாக தெரிவித்துள்ளார். அதாவது ரஜினி நடிக்கும் படங்களை மார்ச் மாதத்தில் தொடங்கும் தயாரிப்பாளர்கள் தீபாவளிக்கே படம் ரிலீஸ் என்பார்கள். அதனால் படம் வெளியாகும் கடைசி நேரத்தில் பின்னணி இசையமைக்க சொல்வார்கள். இதனால் மற்ற நடிகர்களின் படங்களைவிட ரஜினி படங்களுக்காக பல இரவுகள் தூங்காமல் உழைத்தி ருக்கிறேன். அதுவும் எனது ஸ்டுடியோ அமைந்துள்ள பகுதியில் அடிக்கடி பவர்கட் ஆகும் என்பதால் ஜெனரேட்டர் உதவியுடன் பணியாற்றினேன். ரஜினி படம் என்பதால் மற்ற நடிகர்களின் படங்களை விட அவரது படங்களுக்கே முன்னுரிமை கொடுக்க வேண்டிய சூழலும் ஏற்பட்டது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.