எனக்கும் ஒரு எதிர்காலம் உள்ளது... வதந்தி பரப்பாதீங்க : பவித்ரா லட்சுமி | பிரியங்கா மோகனின் துருக்கி கனவு நனவானது | லவ் இன்ஷுரன்ஸ் கம்பெனி - அப்டேட் கொடுத்த விக்னேஷ் சிவன் | கார் பந்தய பயிற்சியின்போது மீண்டும் விபத்தில் சிக்கிய அஜித் | ரீ-ரிலீஸில் சச்சின் படத்தின் முதல் நாள் வசூல் எவ்வளவு | விவாகரத்து நெருங்கிவிட்டது என பதிவு போட்ட ரசிகருக்கு சோனாக்ஷி கொடுத்த பதிலடி | ரயில் ஜன்னல் கம்பி வழியாக மாளவிகா மோகனனிடம் முத்தம் கேட்ட மர்ம நபர் | ரெட்ரோ படத்தின் டிரைலரை உருவாக்கிய அல்போன்ஸ் புத்ரன் | கேரள அரசு விருதை கட்டி அணைத்தபடி தூங்கிய பிரேமலு நடிகர் : வைரலாகும் புகைப்படம் | போதை பொருள் வழக்கு : நடிகர் சைன் டாம் சாக்கோ கைது |
புதுடில்லி : டில்லியில் இரண்டாவது நாளாக நடந்த பத்ம விருதுகள் நிகழ்ச்சியில் மறைந்த பின்னணி பாடகர் எஸ்.பி.பி.,க்கான பத்ம விபூஷண் விருதை அவரது மகன் சரண் பெற்றுக் கொண்டார்.
பல்வேறு துறைகளில் சாதித்த கலைஞர்களுக்கு இந்திய அரசால் பத்ம விருதுகள் வழங்கி கவுரவிக்கப்பட்டு வருகின்றன. கோவிட் பெருந்தொற்று காரணமாக 2020 மற்றும் 2021ம் ஆண்டுகளுக்கு அறிவிக்கப்பட்ட பத்ம விருதுகள் வழங்கும் நிகழ்ச்சி நேற்றும், இன்றும் நடந்தது. டில்லியில் 2வது நாளாக பத்ம விருதுகளை ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் இன்று (நவ.,9) வழங்கினார். மறைந்த பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியனுக்கு பத்ம விபூஷண் விருது அறிவிக்கப்பட்டு இருந்தது. அவர் சார்பில் அவரது மகன் சரண் பெற்றுக் கொண்டார்.
![]() |