தியேட்டர் நெரிசல் பலி - 'ஏ 11' குற்றவாளியான அல்லு அர்ஜுன் | சூர்யா 46வது படத்தின் கதை : தயாரிப்பாளர் வெளியிட்ட தகவல் | ரெட்ட தல, சிறை படங்களின் பாக்ஸ் ஆபீஸ் நிலவரம் | கதை திருட்டு புகாரில் சிக்கிய பராசக்தி : உயர்நீதிமன்றம் போட்ட உத்தரவால் பரபரப்பு | சல்மான்கானின் 60-வது பிறந்தநாள் : திரையுலகினருக்கு மெகா விருந்து | வளர்ந்து வந்த காலத்தில் போட்டிக்குப் போன விஜய்... : அவர் செய்தால் நியாயம், மற்றவர்கள் செய்தால் அநியாயமா...! | தி ராஜா சாப் படத்தில் பைரவி ஆக மாளவிகா மோகனன் | தயாரிப்பாளரை நடிகராக மாற்றும் பாண்டிராஜ் | வார் 2 படத்தால் நஷ்டமா... : தயாரிப்பாளர் விளக்கம் | ஷங்கர் மகனுக்கு ஜோடியாகும் இளம் நாயகி |

சூர்யா தயாரித்து நடித்துள்ள ஜெய்பீம் படம் சில சர்ச்சைகளில் சிக்கியபோதும் பாராட்டுக்களை பெற்று வருகிறது. இந்தபடம் நிஜக்கதையை தழுவி எடுக்கப்பட்டது என்பதோடு இந்த படத்தில் இடம் பெற்ற ராசாக்கண்ணுவின் மனைவி பார்வதி அம்மாள் தற்போது வாழ்ந்து வருகிறார். இந்தநிலையில் நடிகர் ராகவா லாரன்ஸ், ராசாக் கண்ணுவின் மனைவி பார்வதி அம்மாளுக்கு தான் வீடு கட்டி கொடுக்கப்போவதாக அறிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் டுவிட்டரில் வெளியிட்டுள்ள செய்தியில், செய்யாத குற்றத்திற்காக சித்ரவதைக்கு உள்ளாக்கப்பட்டு கொல்லப்பட்டு ராசாக்கண்ணுவின் மனைவி பார்வதி அம்மாளின் இன்றைய நிலையை அறிந்து வருத்தமுற்றேன். பார்வதி அம்மாளுக்கு எனது சொந்த செலவில் வீடு கட்டிக் கொடுக்கிறேன். பார்வதி அம்மாளின் வறுமை நிலையை எனது கவனத்துக்கு கொண்டு வந்தவர்களுக்கு நன்றி என தெரிவித்துள்ளார் லாரன்ஸ்.
மேலும், 28 வருடங்களுக்கு முன்பு நடந்த ஒரு கொடூர நிகழ்வை இன்றைக்கு தமிழகம் முழுவதும் பேசு பொருளாக்கிய ஜெய்பீம் படக்குழுவுக்கும், ஜெய்பீம் படத்தை ஒரு கலைப்படைப்பாக மாற்றிய சூர்யா மற்றும் ஜோதிகா அவர்களுக்கும், இயக்குனர் ஞானவேல் அவர்களுக்கும் எனது மனமார்ந்த பாராட்டுக்களும் நன்றிகளும் என பதிவிட்டுள்ளார் ராகவா லாரன்ஸ்.