நடிகர் வெண்ணிற ஆடை மூர்த்தி பேரன் மனஸ் மானு சினிமாவுக்கு வருகிறார் | நடிகை ஷில்பா ஷெட்டியின் ரெஸ்டாரன்ட் நாளை மூடப்படுகிறது! | சமந்தா வெளியிட்ட துபாய் பேஷன் ஷோ வீடியோவில் தெரிந்த ஆணின் கை! | வீர தீர சூரன்- 2 படத்திற்கு பிறகு மூன்று படங்களில் கமிட்டான விக்ரம்! | ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்துவது புத்திசாலித்தனம்! இயக்குனர் லோகேஷ் கனகராஜ் | 6 வருடங்களில் 6 படம்: ஷிவாத்மிகாவுக்கு கை கொடுக்குமா 'பாம்' | தமிழ் ஆல்பத்தில் கொரியன் பாடகர் | அடுத்த வாரம் ஓடிடி தளத்தில் வெளியாகும் 'கூலி' | பிளாஷ்பேக்: கே.ஆர்.விஜயாவை அறிமுகப்படுத்தி 100வது, 200வது படத்தையும் இயக்கிய கோபாலகிருஷ்ணன் | பிளாஷ்பேக்: குறைந்த சம்பளத்தில் வில்லனாக நடித்த ஜெமினி கணேஷ் |
சிவகார்த்திகேயன் நடித்த டாக்டர் படத்தில் வில்லனாக நடித்திருந்தவர் கராத்தே கார்த்தி. மத்திய ரிசர்வ் போலீஸில் பணியாற்றிக்கொண்டிருந்த இவர் அகில இந்திய காவல் துறை பாக்சிங் போட்டியில் 2003 ஆம் ஆண்டு வெற்றி பெற்று தங்கப்பதக்கம் பெற்றவர். அதுமட்டுமல்லாது கராத்தே பிளாக் பெல்ட் வாங்கியதோடு, அகில இந்திய கராத்தே போட்டிகளில் 13 முறை சாம்பியனாக தேர்ந்தெடுக்கப்பட்டார். மற்றும் ஜிம்னாஸ்டிக், சிலம்பம், ஜூடோ, கிக் பாக்சிங் ஆகிய கலைகளும் கற்றவர்.
சினிமா மீதும், நடிப்பின் மீதும் வைத்திருந்த ஆதீத காதலால் போலீஸ் வேலையை துறந்து சினிமாவில் நடிக்க முயற்சி செய்யத் துவங்கினார். கமலின் தசாவதாரம் படத்தில் ஜூனியர் ஆர்டிஸ்ட்டாக தனது கலை பயணத்தை துவங்கினார்.
சிங்கம் 3, தபாங் 3, என்னை அறிந்தால், பிகில், பேட்ட, இரவுக்கு ஆயிரம் கண்கள், தீரன் அதிகாரம் ஒன்று, கைதி, சங்கத் தலைவன் போன்ற படங்களில் நடித்துள்ளார். தனது 14 வருட போராட்டத்திலிருந்து டாக்டர்தான் என்னை காப்பாற்றினார் என்கிறார் கராத்தே கார்த்திக்.
இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது: கைதி படத்தில் எனது நடிப்பை பார்த்துவிட்டு டாக்டர் படத்தில் வாய்ப்பளித்தனர். எனது 14 வருட சினிமா முயற்சியில் என் திறமையை பார்த்து வந்த முதல் வாய்ப்பு இதுதான். தற்போது நிறைய இயக்குனர்களிடமிருந்து அழைப்பு வருகிறது. அது இதுவரை நான் பட்ட கஷ்டங்கள் அனைத்தையும் மறக்கடிக்க செய்துவிட்டது. என் நடிப்பு திறமையை வெளிப்படுத்தக் கூடிய கதாப்பாத்திரங்களில் தொடர்ந்து நடிப்பேன். என்கிறார் கராத்தே கார்த்தி.